search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற கூட்டம்"

    • சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 240 எம்.பி.க்களுடன் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா இந்த தடவை ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.

    அவருடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்தநிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபா நாயகரை தேர்வு செய்யவும் பாராளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

    முன்னதாக இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 தடவை தொடர்ந்து வெற்றிபெற்ற எம்.பி.யான பா.ஜனதா எம்.பி. பர்த்ரு ஹரி மகதாப் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இந்த எளிய விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு தற்காலிக சபாநாயகர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்துக்கு வந்தார்.

    இதையடுத்து புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பர்த்ருஹரி மகதாப் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்றைய கூட்டத்தை தொடங்கினார். முதலில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் எம்.பி.யாக பதவி ஏற்க பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல் நபராக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றார்.

    இதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்கு 5 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக் கப்பட்டது. அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ பாத்யாய, பா.ஜ.க.வை சேர்ந்த ராதாமோகன் சிங், பகன்சிங் குலஸ்தே ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் அவருக்கு உதவ இந்த 5 எம்.பி.க்கள் குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய எம்.பி.க்கள் பதவிஏற்பு தொடர்ந்து நடைபெறும். நாளையுடன் அனைத்து எம்.பி.க்களும் பதவி ஏற்று விடுவார்கள். அதற்கேற்ப மாநிலம் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பா்.
    • மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3-வது முறையாக கடந்த 9-ந்தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடி பதவி ஏற்ற பிறகு பாராளுமன்றக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

    240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. ஆனாலும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்தது.

    இந்தச் சூழலில், 18-வது பாராளுமன்றத்தின் மக்களவை முதல் கூட்டத் தொடா் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் 27-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளாா்.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பா். மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். வருகிற 26-ந்தேதி பாராளுமன்றத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2 முறை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் கோலோச்சியது. இந்த முறை எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பதால் கூட்டத்தில் அனல் பறக்கும்.

    ஒடிசா மாநிலம், கட்டாக் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தொடா்ந்து 7-வது முறையாக தோ்வான பா்த்ருஹரி மகதாப், மக்களவை இடைக்கால தலைவராக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த இவா், பாராளுமன்றத் தோ்தலுக்கு முன்னா்தான் பா.ஜ.க.வில் இணைந்தாா்.

    அதேநேரம், காங்கிரசை சோ்ந்த 8 முறை எம்.பி.யான கே.சுரேசுக்கு மக்களவை இடைக்கால தலைவா் பதவியை வழங்காதது குறித்து மத்திய அரசை அக்கட்சி விமா்சித்தது. தலித் என்பதால், அவரை புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    காங்கிரசின் குற்றச்சாட்டை நிராகரித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, பல்வேறு முன்னுதாரணங்களை சுட்டிக் காட்டினாா். மேலும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாக அவா் பதில் குற்றச்சாட்டை முன் வைத்தாா்.

    இந்த சர்ச்சையை தொடக்கத்திலேயே எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேபோல் புதிய சபாநாயகர் தேர்விலும் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே பாராளுமன்றத் தலைவா் பதவியை எதிா்பாா்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்காது என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிா்லா பாராளுமன்ற அவைத் தலைவராக செயல்பட்டாா். அவருக்கே பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவா்கள் டி.புரந்தரேஸ்வரி, ராதா மோகன் சிங் உள்ளிட்டோரின் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், பாராளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தரப்பில் வேட்பாளா் களமிறக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. கருத்தொற்றுமை அடிப்படையில் பாராளுமன்றத் தலைவா் தோ்வாவது சிறப்பாக இருக்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

    • சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாத நிலையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று இருந்தது. அக்கட்சியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்தூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுமித்ரா மகாஜனும், 2-வது ஆட்சிக்காலத்தில் ராஜஸ்தானின் கோட்டா தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஓம்பிர்லாவும் பாராளுமன்ற சபாநாயகர்களாக செயல்பட்டனர்.

    ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை (272) இல்லாத நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் (16), பீகாா் முதல்-மந்திரி நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் (12) உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

    கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், இம்முறை எதிரணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி வரை நடைபெறும் நிலை யில் முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனா். இதையொட்டி, இடைக்கால பாராளுமன்ற சபாநாயகர் நியமிக்கப்ப டுவாா்.

    பின்னா், வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற சபா நாயகர் தோ்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 25-ந் தேதி பிற்பகலுக்குள் வேட்பாளா் பெயா்களை எம்.பி.க்கள் பரிந்துரைக்க மக்களவைச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததில் 'கிங் மேக்கா்களாக' மாறிய தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் பாராளு மன்ற சபாநாயகர் பதவி யைப் பெற முனைப்புக் காட்டுவதாகவும், முக்கி யத்துவம் வாய்ந்த இப்பதவி யை விட்டுக் கொடுக்க பா.ஜ.க. விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வருகிற 22 அல்லது 23-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் கள், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஆலோசனை முடிவில் சபாநாயகர் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே பாராளு மன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளா் தோ்வு குறித்து ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் கே.சி.தியாகி கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் வலுவான கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. பா.ஜ.க.வால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்' என்றாா்.

    அதே நேரம், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் பட்டாபிராம் கொம்ம ரெட்டி கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக அமா்ந்து பேசி, பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும். கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளா் தோ்வு செய்யப்பட வேண்டும்' என்றாா்.

    இந்த இரு கட்சிகளும் மாறுபட்ட கருத்துகளை கூறியிருப்பதால், பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக தோ்வாகப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

    பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தெலுங்குதேசம் வேட்பாளா் களமிறக்கப்பட்டால், 'இந்தியா' கூட்டணி ஆதரிக்கும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யு மான சஞ்சய் ரவுத் தெரிவித்தாா்.

    இது தொடா்பாக, மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற சபாநாகர் தோ்தல் முக்கியமானது; அப்பதவி பா.ஜ.க.வுக்கு கிடைக்குமேயானால், அதன் மூலம் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தங்களின் கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க. உடைத்துவிடும்.

    தன்னை ஆதரிப்பவா்களுக்கு பா.ஜ.க. துரோகம் இழைக்கும் என்பதை நாங்கள் அனுபவபூா்வமாக உணா்ந்தவா்கள். பாராளுமன்றத் தலைவா் பதவிக்கு தெலுங்கு தேசம் தனது வேட்பாளரை களமிறக்க விரும்புவதாக அறிந்தேன். அது நடக்கும்பட்சத்தில், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஆலோசித்து, தெலுங்கு தேசத்துக்கு ஆதரவளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இந்தியா கூட்டணி வேண்டுகோளை தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நிராகரித்துள்ளன. இதையடுத்து சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலாசித்து வருகிறார்கள்.

    இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடத்துவது போல இருக்கும்.

    இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. அதே சமயத்தில் ஒடிசாவை சேர்ந்த மகதப் என்ற எம்.பி. பெயரும் சபாநாயகர் பதவிக்கு அடிபடுகிறது.

    துணை சபாநாயகர் பதவிக்கு கூட்டணி கட்சிக்கு வழங்க பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 22-ந்தேதி இதற்கெல்லாம் விடை கிடைத்துவிடும்.

    • மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார்.
    • 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி யது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.

    17 அமர்வுகளாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு 21 மசோதாக்களை நிறைவேற்றியது. டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்ட மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா, காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசுகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது என்றார். இதை தொடர்ந்து பாராளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மனீஷ்திவாரி எம்.பி. பேசுகையில், அரசிய லமைப்பு சட்டத்தின் 105(1) பிரிவின்படி ஒவ்வொரு எம்.பி.க்கும் பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ் பெண்டு செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோத மானது என்றார்.

    சிவசேனா எம்.பி. பிரி யங்கா சதுர்வேதி பேசுகையில், எதிர்க்கட்சியினர் பேசுவதால் பிரதமர் மோடியும் ஒட்டு மொத்த அமைச்சரவையும் எரிச்சலடைகிறார்கள். எங்கள் கூட்டணியின் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றார்.

    காங்கிரஸ் தலைமைக் கொறடா சுரேஷ் பேசும் போது, எம்.பி.யாக இருந்த வரை சஸ்பெண்டு செய்ததன் மூலமாக பாராளுமன்ற ஜன நாயக அமைப்பை கொன்றுவிட்டார்கள் என்றார். மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசும்போது, 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    பின்னர் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மதியம் 12.30 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

    • ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.

    பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரின்குவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் மக்களவை இடைநீக்கம் செய்துள்ளது.

    மக்களவை டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா நிறைவேற்றியதால், அவையின் நடுபகுதிக்கு வந்த ரிங்கு காகிதங்களை கிழித்து சபாநாயகர் ஓம் பிர்லா மீது வீசினார்.

    மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிர்லா அவையில் நடந்த ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் கேட்டார்.

    மக்களவை உறுப்பினர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பிர்லா, ரிங்குவை முறையாகப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து மழைக்கால அமர்வின் மீதமுள்ள கூட்டத்திற்கு அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சர் முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் ரிங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார்.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது.

    அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதனால் கடந்த வாரம் முழுவதும் மக்களவை, மேல்சபை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

    அதானி குழும விவகாரம் மற்றும் ராகுல் காந்தி பிரச்சினையால் பாராளுமன்றத்தில் நேற்றும் 6வது நாளாக அமளி ஏற்பட்டது. இரு அவைகளும் முடங்கியது.

    பாராளுமன்றம் இன்றும் 7வது நாளாக எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்களால் முடங்கியது. பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார்.

    அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். "எங்களுக்கு கூட்டு குழு விசாரணை தேவை" என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களை ஓம் பிர்லா அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அவர் கூறும்போது, "பட்ஜெட் தொடர் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும். இதனால் அமைதியாக இருங்கள்" என்றார்.

    ஆனால் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

    மேல்சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து ராகுல்காந்தி மன்னிப்பு கேட்ககோரி முழக்கமிட்டார்கள்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தை எழுப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியில் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

    அதானி, ராகுல்காந்தி பிரச்சினையால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது. பாராளுமன்ற முதல் மாடியில் ஏறி நின்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    பாராளுமன்றம் கடந்த 13ம் தேதி கூடியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளும் எம்.பி.க்களின் அமளியால் முடங்கியது.

    லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதீய ஜனதா எம்.பி.க்களும், அதானி முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 5 நாட்களாக பாராளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கபட்டது.

    இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

    அவர்களை அமைதி காக்குமாறும், தங்கள் இருக்கைக்கு சென்று அமரு மாறும் சபாநாயகர் ஓம்பிர்லா பல முறை கூறினார். ஆனாலும் அவர்கள் அதை கேட்கவில்லை. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதேபோல் மேல்- சபையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதே பிரச்சினையை வழக்கம் போல எழுப்பினார்கள். சபை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டும் அவர்கள் இடைவிடாமல் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் மேல்- சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து, இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    • பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது.
    • ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.

    அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 4 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    மேலும், அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதானல், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து 5வது நாளாக இன்று இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே கூட்டத் தொடரை முடிக்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • பாராளுமன்ற கூட்டத் தொடரை 23ம் தேதியுடன் முடிக்க ஆலோசனை நடந்து வருகிறது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 29ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே கூட்டத் தொடரை முடிக்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து குளிர்கால கூட்டத் தொடரை முன் கூட்டியே முடிக்க மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். பாராளுமன்ற கூட்டத் தொடரை 23ம் தேதியுடன் முடிக்க ஆலோசனை நடந்து வருகிறது.

    ×