search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் பாலம்"

    • பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன.
    • புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே புதிய ரெயில் பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன இந்த பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. பாலத்தின் மையப்பகுதி வழியாக கப்பல்கள் கடக்க வசதியாக செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைகிறது.

    இதற்காக 77 மீட்டர் நீளமும் சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம், ரெயில்வே பாலத்தின் நுழைவுப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு நகரும் கிரேன்கள் மூலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி சுமார் 2 மாதங்களாக நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குப்பாலம் அமையும் மையப்பகுதியில் உள்ள 2 தூண்கள் மீது கொண்டு வந்து வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    இதை கொண்டாடும் வகையில் ரெயில்வே கட்டுமான நிறுவனம் சார்பில் நடுக்கடலில் வாணவேடிக்கை நடைபெற்றது. அதிகாரிகள், என்ஜினீயர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

     

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனி அதனை திறந்து மூட தேவையான கேபிள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தூக்குபாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    இந்த சோதனையானது, ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தூக்குப்பாலம் வழியாக ரெயில் பாலம் முழுவதும் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவர் அவருக்கு கூறினார்.

    இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை நேற்று ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி ரூ.535 கோடி மதிப்பிட்டடில் இரட்டை வழித்தடத்தில் புதிய ரெயில் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது. கப்பல்கள் வந்து செல்லும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் மையப்பகுதியில் கப்பல்களுக்கு விழிவிடும் வகையில் உயர் மின் அழுத்தம் கொண்ட மோட்டர்கள் மூலம் மேல் நோக்கி தூக்கும் வகையில் மையப்பகுதி அமைக்கப்படுகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இருந்து மையப்பகுதியில் பொறுத்தப்படும் பாலம் வடிவமைக்கப்பட்டு தற்போது மையப்பகுதி அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மையப்பகுதியில் பொறுத்தப்படும் தூக்கு பாலம் பொறுத்துவதற்கு வசதியாக கடலில் ராட்சத இரும்பு மிதவையில் கிரேன் பொருத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் காரணமாக தூக்குப்பாலம் கால்வாயில் கப்பல்கள் பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் வரை கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது என ரெயில் விகாஸ்நிகம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.
    • மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலின் மேல் பகுதியில் 1914 ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரெயில் பயணத்தை மட்டுமே நம்பி பயணித்து வந்தனர்.

    இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு கப்பல்கள் பேருந்து பாலம் கீழ் பகுதியில் தடையின்றி கடந்து செல்லும் வகையில் பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பேருந்து பாலத்தின் அழகை ரசிக்கும் வகையில் 181 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அனைத்து கம்பத்திலும் அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டது. ராமேசுவரத்திற்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பாலத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் அழகை தொலைவில் இருந்து பார்த்து ரசித்தனர்.

    இந்நிலையில் பாலத்தில் வழியாக ராமேசுவரம் செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண்டபம் தோணித் துறை பகுதியில் தடுப்பு அமைத்து வசூல் செய்யப்பட் டது. இதன் பின்னர் அந்த உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது. மேலும் பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

    இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தோணித்துறையில் இயங்கி வந்த சுங்க கட்டணம் வசூல் மையம் 2017-ல் அகற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, பாம்பன் பேருந்து பாலத்தின் பரமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் உயர்கோபுர விளக்கு உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மீண்டும் புதிய கம்பங்கள் மாற்றப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தத்தப் படவில்லை.

    தற்போது வரையில் ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து பாலத்தில் ஒரு நாள் கூட 181 விளக்குகளும் எரிந்தது கிடையாது. பெரும்பாலான நேரங்களில் பாலம் முழுமையாக இருளில் தான் காணப்படும். மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    அதே வேளையில் மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு பாம்பன் ஊராட் சியில் பணம் கட்ட நிதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமேசுவரம் நகராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைத்து அனைத்து வானகங்களுக்கும் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூல் செய்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வசூல் செய்து வருகின்றனர். பாம்பன் பேருந்து பாலத்தின் முழு பயனும் ராமேசுவரம் நகராட்சிக்கு மட்டுமே கிடைப்பதால் மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சியே செலுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பாம்பன் பேருந்து பாலத்திற்கு மின் கட்டணம் செலுத்துவது, மின்பாக்கியை செலுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாம்பன் பேருந்து பாலத்தின் அனைத்து மின்விளக்கும் எரிவதற்கான நடவடிக்கையை காலதாமதம் இன்றி எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.

    இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாம்பன் பாலம் அருகே கடற்கரை பூங்காவில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வருகிற 21-ந்தேதி மீனவர்தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கடல் உணவு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் பாம்பன் பாலம் அருகே உள்ள கடற்கரை பூங்காவை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    பூங்காவில் வைக்கப் பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள், விளை யாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள் வசதிகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கூடுதலாக உபக ரணங்கள் அமைக்கவும், மின்விளக்குகள் அமைக்க வும், சுற்றுச்சுவரை சீர மைத்து வர்ணம் பூசி ஓவியங்கள் தீட்டி பொது மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்க வேண்டுமென அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

    வருகிற 21-ந்தேதி மீனவர்தினம் கடைபிடிக் கப்படுவதையொட்டி இங்கு மாபெரும் கடல் உணவு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு வகையான கடல் உணவுகள் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

    கடல் உணவுப் பொருட் களின் சிறப்புகளை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடல் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. கடல் உணவு அரங்கத்தை பார்வை யிடவும், விதவித மாக உணவுகளை சாப்பி டவும் ஏராளமானோர் வரு வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) அருண்பிரசாத், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகளை மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    ராமேசுவரம்

    பாம்பன் கடலில் 100 அடி உயரத்தில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக அரசு வாகனங்கள், லாரிகள், சுற்றுலா பஸ், கார், வேன், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ராமேசுவரத்திற்கு சென்று வருகின்றன.

    ராமேசுவரம் புன்னிய தலமாக உள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இரவு நேரங்களிலும் பாம்பன் பாலத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பலரும் பாலத்தில் இறங்கி நின்று கடலை ரசிக்கின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாலத்தில் ரூ. பல கோடி மதிப்பிட்டில் புனர மைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. நீண்ட தொலைவில் வரும் போதே பாலத்தில் அழகை சிறப்பாக காணும் வகையில் 350-க்கும் மேற்பட்ட எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது.இதற்கு பல லட்சம் செலவிடப்பட்டுள் ளது.

    ஆனால் பல விளக்கு கள் சரிவர எரியாமல் உள்ளது. குறிப்பாக பாலம் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட விளக்குகள் முழுமையாக சரியாக எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    இந்த நிலையில் பக்தர்கள், பயணிகள், வாகன ஓட்டிகளின் நலனை கருதி பாம்பன் பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து விளக்குகளும் எரியும் வகையில், பழுதடைந்த மற்றும் சரிவர எரியாத விளக்குகளை சீரமைத்து மாற்றியும் தர வேண்டும் என்றும், இரவு நேரத்தில் பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரையாக வருகை தருகிறார்கள். அவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்கிறார்கள்.

    இதற்கிடையே மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் வாராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதி கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. அத்துடன் நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாகவும் அடையாளம் காணப்பட்டது.

    இந்த தூக்கு பாலம் ஒரு பொறியாளர் தலைமையில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் பாரமரிக்கப்பட்டு வந்தது. தூக்கு பாலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த பாலம் அமைந்திருந்தது.

    105 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து, பாம்பன் கடல் பகுதியில் துளையிட்டு மண் ஆய்வுப் பணி தொடங்கியது. விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

    இதன் பின்னர் 6 மாதம் கழித்து குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் மீண்டும் பணிகள் தொடங்கியது. 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாலத்தின் மையப்பகுதியில் மேல்நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் தண்டவாளம் பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு இருபுறமும் தூண்கள் அமைப்படும். இன்னும் 6 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

    • தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
    • திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 4 நாட்களாகவே பயணிகள் ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரையிலும் மண்டபம்-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை புறப்படும் ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    • பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    1914-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த பாலம் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. தென்னக ரெயில்வேயின் முக்கிய அடையாளமாக உள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்டர்கள் கடல் காற்று காரணமாக அடிக்கடி துருப்பிடிக்கும்.

    இதனை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக பிரத்யேக கலவைகளும் பாலத்தில் பூசப்பட்டு வருகிறது. புயல் மற்றும் கடல்காற்று அதிகமாக வீசப்படும் காலங்களில் பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    கடல் காற்று, அலையின் தன்மைகளை கண்டறிய தண்டவாளத்தில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவி கடல் காற்றின் வேகம், சீற்றம் குறித்து பதிவு செய்யும். அதனை பொருத்து பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று வீசும் தன்மை, அலையின் தன்மை குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    இந்த தொழில்நுட்ப கோளாறால் ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ், ஷேர் ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

    பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை பாம்பன் வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    ×