search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.சி."

    • வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது.
    • வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை.

    இந்த கத்திரி வெயில் காலம் அனைவரையும் வதைத்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வெயில் மாலை வரை மக்களை திணறடிக்கிறது.

    வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை. ஏ.சி. வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் அதன்மூலம் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஏ.சி. வாங்க முடியாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். சரி ஏ.சி. இல்லாட்மல் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் இதோ....

    ஏ.சி. இல்லாத வீடுகளில் மின்விசிறி இருக்கும். மின் விசிறியை பயன்படுத்தி அறையை குளிரவைக்க முடியும். மின் விசிறியிலும் கூரையை ஒட்டி உள்ள சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் அதிக குளிர்ந்த காற்றைத் தரும்.

    இந்த மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்சாஸ்ட் மின் விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இவை உதவும். ஏ.சி.இல்லாமல் அறையை ஓரளவு குளுமையாக வைத்திருக்க எக்சாஸ்ட் ஃபேன்கள் கைகொடுக்கும்.

    திரைச்சீலைகள் மூலம், சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம் . வெளிர்நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க உதவும். வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வண்ண ஜன்னல் கண்ணாடிகளும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

    இயற்கையான காற்றோட்டத்துக்கான வழிகளைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில். குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்துவைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்துவைக்கும் போது. பாதுகாப்பு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

    அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின் விசிறியை ஓடவிடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி, அறைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல ஏ.சி. இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம்.

    சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படும். தற்போது சிறிய, குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.

    அறையில் சில அழகுத் தாவரங்களை வைத்து வளர்க்கலாம். அவை வீட்டை குளிர்விக்க உதவுகின்றன. ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன, சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் கொடுக்கின்றன.

    வீட்டைச் சுற்றிலும் இடம் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.

    பொதுவாக, அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வீட்டில் குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்.ஈ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்கள் மூலம், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து. குளுமையாக வைத்திருக்கலாம்.

    • 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.
    • வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சமீபநாட்களாக வெயில் வாட்டி வதைக்க துவங்கியு ள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டுகிறது.கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் சுடுதல் மக்களை வாட்டி வதைக்க துவங்கியிரு க்கிறது.கடந்த சில நாட்களாக அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டுகிறது. இதனால் ஏர் கூலர், ஏ.சி., விற்பனை அதிகரிக்க துவங்கியிரு க்கிறது. வீடுகளில் எந்நேரமும் மின் விசிறியை சுழல விட வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.

    சில நாட்களில் பள்ளி தேர்வுகள், முடியவுள்ள நிலையில் ஊட்டி, கொடை க்கானல் உள்ள மலைப் பிரதேசங்களுக்கு செல்லவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.குறைந்தபட்சம் வார விடுமுறை நாட்களிலா வது, வெயிலில் இருந்து தப்பிக்க மலை பிரதேசம் செல்லும் திட்டமிடலில் பலரும் உள்ளனர். ஊட்டியில் அதிக பட்சம் 24 டிகிரி செல்சியது அதாவது 74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுகிறது.

    • ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.
    • கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை இடையேயான அதிவிரைவு ெரயிலில் 2 அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை (22475) அதிவிரைவு ரெயில், வாரம் தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 5 முதல் 26 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை- ஹிசார் (22476) அதிவிரைவு ரெயில் வாரம் தோறும் சனிக்கிழமை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 8 முதல் 29 வரை இரண்டு அடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அருகே சென்ற போது குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டி ஒன்றில் ஏசி செயல்படவில்லை
    • வள்ளியூர் ரெயில் நிலையத்தில் மாலை 6.47 மணி முதல் இரவு 7.15 மணி வரை சுமார் ½ மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலையில் 6.10 மணிக்கு சென்னையை சென்றடையும்.

    நேற்று வழக்கம்போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. நாகர்கோவிலுக்கு 6.07 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அருகே சென்ற போது குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டி ஒன்றில் ஏசி செயல்படவில்லை. இதனால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து பயணிகள் ரெயிலை நடு வழியில் நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரெயில் பயணி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நெல்லை சென்றதும் மாற்று குளிர்சாதன பெட்டி பொருத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சென்றது. வள்ளியூர் ரெயில் நிலையத்தில் மாலை 6.47 மணி முதல் இரவு 7.15 மணி வரை சுமார் ½ மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    வள்ளியூரில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சென்றடைந்ததும் குளிர்சாதன பெட்டியை மாற்ற அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பழுதான குளிர்சாதன பெட்டியை மாற்றி விட்டு அதற்கு பதிலாக புதிதாக ஒரு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட்டது.

    இதனால் நெல்லையி லிருந்து ரெயில் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. வள்ளியூர் மற்றும் நெல்லை யில் ரெயில் தாமதமாக சென்றதால் இன்று அதிகாலை சென்னைக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்று சேர்ந்தது.

    ×