என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பாம்பை"

    • 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது.
    • பிடிபட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் வனப் பகுதியில் இருந்து மலைப்பாம்பு, சாரப்பாம்பு போன்ற வன உயிரினங்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருவது அடிக்கடி நடக்கின்றன.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றும் மழை பெய்த நிலையில் பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் புதிய குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது.

    இதை கண்ட பொது மக்கள் கிருஷ்ணகிரி வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனச்சரகர் ரவியின் உத்தரவின் பேரில், வனக்காவலர் குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் பழனிசாமி, மாதப்பன், ஆகியோர் விரைந்து வந்து பாம்பை பிடித்தனர்.

    பிடிபட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

    • கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.
    • வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடியிருப்புக்குள் சுமார் 12 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவு தேடி வந்தது.

    இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் மலைப்பாம்பை பார்த்து கத்தி கூச்சலிட்டனர். மேலும் கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். பாம்பு சீரியதால் அனைவரும் பயந்து ஓடினர். இதனையடுத்து மாட்டின் கயிற்றை சிலர் எடுத்து வந்தனர்.

    பின்னர் பாம்பு எங்கும் செல்லாதவாறு தலை பகுதியில் கயிற்றால் சுருக்கு முடி போட்டு கட்டி வைத்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடுகத்தூர் வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.

    இதனையடுத்து மலைப்பாம்பை வனத்துறையினர் அருகே உள்ள பரவமலை காப்பு காட்டில் பத்திரமாக கொண்டு போய் விட்டனர்.

    மேலும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பாம்புகளை இதுபோன்று கயிற்றால் கட்டக் கூடாது என்று அறிவுறுத்தி சென்றனர்.

    குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராம மக்கள் கயிற்றால் கட்டி வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×