search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோயில்"

    • திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மாதந்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
    • கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்களை விசாரிக்க என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

    ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குளறுபடி, முறைகேடு, ஊழல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 10 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டிய ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை ரூ.14,449 கட்டணத்தில் டிக்கெட்களை குறிப்பிட்ட 545 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் 545 பேரும் இதுவரை 15 கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 500 தரிசன டிக்கெட் வாங்க செலவு செய்திருப்பதும், ஒவ்வொருவரும் தலை 2 லட்சத்து 78 ஆயிரத்து 378 ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தி ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவர்களில் பலர் இடைத்தரகர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் வாங்கிய டிக்கெட்டுகளுடன் தரிசனத்திற்காக அடுத்த முறை திருப்பதிக்கு வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏராளமான பக்தர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிராங்க் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024 பிரிவு 299 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.

    டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி விரைந்துள்ளனர்.

    • பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

    பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    • திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
    • கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் இலவச தரிசன நேர டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நாளை அதிகாலை முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில் நேற்று பகல் 1.30 மணி அளவில் முன்கூட்டியே சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.

    தினமும் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் 11-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அந்தந்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருவதால் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே அன்றைய தரிசனம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்குவதை நிறுத்தி அன்றே வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 78,460 பேர் தரிசனம் செய்தனர். 29,182 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.03 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    • வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
    • பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    ×