என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டபொம்மன்"

    • கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.கண்ணன் மற்றும் ராஜகம் பள சமுதாய நல சங்கத்தினர் அதிமுக இடைக்கால பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

    பின்னர் அவர்கள் ஜனவரி 3-ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினத்தன்று மதுரையில் உள்ள அவரது சிலைக்கும், சயத்தாறில் அவர் நினைவிடத்தில் உள்ள உருவச்சிலைக்கும் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என மனு அளித்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

    கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மதுரை

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உள்ள கட்டப்பொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் ராமமூர்த்தி, வி. கே. எஸ். மாரிச்சாமி, முருகேசன்,முனியசாமி, முத்து இருளாண்டி, செந்தில் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் ராமமூர்த்தி, வி.கே.எஸ். மாரிச்சாமி, முருகேசன், முனியசாமி, முத்து இருளாண்டி, செந்தில், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி. ஆர்.ராஜ்மோகன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலை பிரபு, ஆட்டோ கருப்பையா, கொம்பையா,கண்ணன், உசிலை சசிகுமார், சோலை இளவரசன், பிரபாகர், சுந்தரா, குருசாமி, கார்த்திகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கட்டபொம்மன் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளார்.

    ம.தி.மு.க. சார்பில் மதுரையில் உள்ள கட்ட பொம்மன் சிலைக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பூமிநாதன் எம்.எல்.ஏ., சுருதி ரமேஷ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை யொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


    திருமங்கலத்தில் தி.மு.க. சார்பில் கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்ட பொம்மன் உருவப்படத்திற்கு அவைத்தலைவர் நாக ராஜ் தலைமையில் நகர செயலாளர் ஸ்ரீதர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞரணி மதன்குமார், கவுன்சிலர்கள் திருகுமார், வீரகுமார், முருகன், வினோத், சரண்யா ரவி, கவுதம் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜகோபுரம் திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • கும்பாபிஷேக தினத்தன்று கட்டபொம்மன் காலத்தில் ராஜகோபரமணி ஒலிக்க இருப்பதாக கூறப்படுகிறது

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

    தற்போது கோவிலில் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாக பணிகள் அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல் நிறுவனம் சார்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இப்பணிகள் விரைவில் நிறைவுபெற்று வருகிற ஜூலை 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது .

    இந்நிலையில் ராஜகோபுரம் திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகிறது. ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு பொருத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜகோபுரத்தின் ஒன்பதாவது நிலையில் கட்டபொம்மன் காலத்தில் ஒலித்த ராட்சத மணி உள்ளது.

    அந்த காலத்தில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சண்முக விலாச மண்டப முகப்பில் உள்ள மணி அடிக்கப்பட்டதும், ராஜகோபுரத்தில் உள்ள மணி அடிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பாஞ்சாலங்குறிச்சி வரை கட்டபொம்மன் அமைத்த மணி மண்டபங்களில் உள்ள மணிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்கும். இந்த மணிகள் வரிசையாக ஒலித்த பின் பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கதேவியை வணங்கி விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம்.

    இந்த மணி கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது ஒலித்தது. அப்போது சிறிது காலம் மட்டும் ஒலித்தது. பிறகு காலப்போக்கில் மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டது.

    தற்போது ராஜகோபுரம் திருப்பணிகளோடு ஒன்பதாவது நிலையில் உள்ள ராட்சத மணியும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கும்பாபிஷேக தினத்தன்று கட்டபொம்மன் காலத்தில் ராஜகோபரமணி ஒலிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ×