search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்"

    • ஆவணி திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம்.
    • ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    ஒன்பதாம் நாள் விழா அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து வருகிறது.

    • மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது
    • திருவெம்பாவை இசை நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, 8.30 மணிக்கு திருவெம்பாவை இசை நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 5.30 மணிக்கு பக்தி இன்னிசை மற்றும் மண்டகபடிக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு கற்பக விருச்ச வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா வருதல் நடந் தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங் கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய் தந் தையருக்கு நடக்கும் திருவி ழாவில் பங்கெடுக்கும் 'மக் கள் மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.

    4-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடந்தது. இரவு 10மணிக்கு பக்தி இன்னிசை, 10.30 மணிக்கு மேளதா ளங்கள் முழங்க பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    5-ம் திருவிழாவான நாளை ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன், சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை கருடன் வலம் வரும் 'கருட தரிசன நிகழ்ச்சி' நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஜனவரி 5-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    ×