என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகாடமி"

    • 200 ஏக்கர் பரப்பளவில் அமையும் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளது.
    • திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பகுதியில்

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடந்த 29ம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1000 கோடிக்கு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது தமிழகத்தின் 4 மண்டலங்களில் அமைப்பதாக சட்டசபையில் அறிவித்த ஒலிம்பிக் அகாடமிகளில் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என அறிவித்தார். இது இங்குள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    இந்த புதிய ஒலிம்பிக் அகாடமி திருச்சி பஞ்சப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 538 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் புதிய பஸ் முனையத்துக்கு 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோலார் பிளான்டுக்கு 30 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மொத்தம் 200 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதம் 325 ஏக்கர் நிலம் உள்ளது.

    இதில் புதிய ஒலிம்பிக் அகாடமிக்கு 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.

    என். நேரு, கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்தியநாதன் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளனர்.

    ஒலிம்பிக் அகாடமி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மேயர் அன்பழகனும் இன்று உறுதி செய்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது,

    ஒலிம்பிக் அகாடமிக்கு பஞ்சப்பூர் உகந்த இடமாக உள்ளது. விமான நிலையமும் அருகாமையில் உள்ளது. சர்வதேச வீரர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்த ஒலிம்பிக் அகாடமி விளையாட்டு வீரர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் என்றார்.

    • மார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது
    • 94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    டியூன் பாகம் 1 2021 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை டெனிஸ் இயக்கினார்.இப்படம் 1965 வெளிவந்த நாவலின் அடிப்படையில் எடுக்கபட்டது. ஜான் மற்றும் எரிக் ரோத் திரைக்கதை எழுதியுள்ளனர். சை ஃபை கதைகளமாக இந்த படம் வடிவமைக்கப்பட்டது.

    165 மில்லியன் டாலர் பொருட் செலவில் எடுக்கபட்ட இந்த படம் 435 மில்லியன் டாலர் உலகளவு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ட்யூன் பாகம் ஒன்றின் வெற்றியைத் தொடர்ந்து பாகம் 2 எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

    அதன்படி படப்பிடிப்பு முடிந்துமார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது. சென்னையுள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிகொண்டு இருக்கிறது டியூன்.94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.
    • Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது

     97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.

    Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.

    இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வானது.

    ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.

    அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்ற ஆகும் ஆனால் சிறந்த லவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை I'M NOT A ROBOT படம் வென்றது.

    இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்த அனுஜா திரைப்படம் விருது வெல்லாததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீன் பேக்கர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா.
    • இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

    2024 ஆம் ஆண்டு சியான் பேகர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா. இப்படத்தின் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் சீன் பேக்கர் மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் Mikey Madison, Mark Eydelshteyn,Yura Borisov,Karren Karagulian, Vache Tovmasyan மற்றும் Aleksei Serebryakov முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் இந்த ஆஸ்கர் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை 25- வயதே ஆன மைக்கி மாடிசன் வென்றுள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். ஒரு நபர் நாங்கு ஆஸ்கர் விருதினை வாங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது.
    • Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது .

    இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.

    Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது . சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதால் கெனைன் ஓ பிரைன் அவரது தொடக்க உரையை ஆங்கில மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, ஸ்பானிஷ், சீன மற்றும் பிற மொழிகளிலும் பேசினார்.

    அதில் அவர் இந்தியில் கூறியதாவது " நமஸ்தே. இந்தியாவில் தற்பொழுது காலையாக இருக்கும். நீங்கள் அனைவரும் 97- வது அகாடமி விருது வழங்கும் விழாவை மகிழ்ச்சியாக காலை உணவை சாப்பிட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் இந்தியில் பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியில் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×