என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2023"
- ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா?
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது.
லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும்.
இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.
இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணி பந்து வீச உள்ளது. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை மோதுகின்றன.
- இலங்கையை ஏற்கனவே வீழ்த்தியுள்ளதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
கொழும்பு:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.
நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.
இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.
இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்ததாக தகவல்
- பேக்-அப் வீரராக வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டுள்ளார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவரது காயத்தின் வீரியம் குறித்து சரியான தகவல் வெளியாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அக்சார் பட்டேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்படும் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாகவும், உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளதால் பிசிசிஐ கவலை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர், கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 ரன்னில் தோல்வி
- சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும்
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 'லீக்' முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.
இதன் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா- தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.
இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. 'லீக்' சுற்றில் நேபாளம் 'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்தியா நுழைந்துவிட்டதால் வங்காளதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரர் (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.
நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 259 ரன்களை எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா டக் அவுட்டானார். திலக் வர்மா 5 ரன்னிலும், இஷான் கிஷன் 5 ரன்னிலும், கே.எல்.ராகுல் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஜடேஜா 7 ரன்னிலும் வெளியேறினர்.
தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
இறுதியில், இந்திய அணி 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.
வங்காளதேசம் சார்பில் முஸ்தபிர் ரகுமான் 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினார். முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
ஆனாலும் சுப்மன் கில் நிதானமாக ஆடி சதமடித்தார்.இதில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
- இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
- கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.
கிரிக்கெட் களத்தில் ஆடும் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை என்லாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் இருக்கும் காமெடியை வெளிப்படுத்த விராட் கோலி தவறியதே இல்லை.
அந்த வகையில், இன்று இந்தியா மற்றம் வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
Virat will always entertain no matter he is playing or not! ?????#ViratKohli #AsiaCup2023 #INDvBAN pic.twitter.com/gz9gOJVTub
— Bat Ka Grip (@8408Rohit) September 15, 2023
அந்த வகையில், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் போது, "வாட்டர் பாய்"-ஆக களத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு நீராகாரம் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி வேகவேகமாக ஓடி வந்தார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை விராட் கோலி ஓடிய விதம் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களை குவித்தார்.
- இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்களை இழந்து 265 ரன்களை குவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களையும், தௌஹித் ரிடோய் 54 ரன்களையும் நசும் அகமது 44 ரன்களையும் குவித்தனர்.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இவர்தவிர முகமது ஷமி இரண்டு விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
- இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.
தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.
பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள்.
- வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம். முதுகுவலியால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் களம் திரும்ப வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டினர். ஆனால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 5 ஓவர்களில் 29 ரன் விட்டுக்கொடுத்தாரே தவிர விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சிறப்பாக பந்து வீசும் நிலையில், மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் தேவையில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கும்பிளே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் அக்ஷர் பட்டேல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மற்றபடி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா என்று இந்தியா வலுவாக திகழ்கிறது. சாதனையின் விளிம்பில் உள்ள ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள். அந்த அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாயகம் திரும்பி விட்டார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அவரை கழற்றி விட்டு தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கொழும்பு ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் ஷகிப் அல்-ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மமூத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும் 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷர்துல் தாக்குர், ரவீந்திரஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது பும்ரா.
வங்காளதேசம்: மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன் அல்லது முகமது நைம், லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், அபிப் ஹூசைன், ஷமிம் ஹூசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமூத்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
- பாகிஸ்தான் 5 முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஆட்டங்களில் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை, இலங்கை அணி கடைசி பந்தில் எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) 12-வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐநது முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடைசி பந்தில் இலக்கை எட்டிய சம்பவம், ஆசிய கோப்பை தொடரில் இது 2-வது முறையாகும். இதற்கு முன்பாக 2018 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக வெற்றி பெற்றிருந்தது.
ஆசிய கோப்பையில் முதல் மூன்று போட்டிகளில் 68.3 ஓவர்கள் வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் 52.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினர்.
- கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி
- 47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தல்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின.
இறுதியாக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் அசலங்கா சிறப்பாக விளையாடி இரண்டு ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். மேலும், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து கூறியதாவது:-
பீல்டரின் இடையே பந்தை தட்டிவிட்டு எப்படி இரண்டு ரன்களுக்கு கஷ்டப்பட்டு ஓடுவது என்பது குறித்து யோசித்தேன். எதிர்பக்கம் இருந்த பதிரனாவிடமும் கடுமையாக ஓடி இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றேன்.
கடைசி பந்தை பவுன்சர் அல்லது யார்க்கர், அதை தவிர்த்து ஸ்லோவர் பந்தாக வீசுவார் என்று நினைத்தேன். இது எனக்கு ஏற்ற பந்துதான். இதனால் நான் உற்சாகமாக இருந்தேன். மெண்டிஸ்- சதீரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் போட்டியை முடிக்க விரும்பினேன். அது என்னுடைய ரோல். என்னுடைய வரலாற்று சாதனை புத்தகத்தில் இது என்னுடைய 2-வது இன்னிங்ஸ்'' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்