search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா கால்பந்து வீரர்கள்"

    • திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது.
    • சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர். வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்ததால் குளிக்காமல் வந்து விட்டதாக மகா கும்பமேளாவுக்கு சென்றிருந்த கேரள மாநில கால்பந்து வீரரான வினீத் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-


    மகா கும்பமேளா நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வு என்று நினைத்து அங்கு நான் சென்றேன். என் அனுபவத்தில் அது அப்படி இல்லை. மிகப்பெரிய கூட்டம் இருந்தது. திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை. இதனால் அந்த அழுக்கு நீரில் நான் குளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • ஜெர்மனியில் 2500 பெனால்டிக் கிக் அடித்ததே சாதனையாக இருந்தது.
    • காலை 7.38 மணிக்கு பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கி இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்த போது இவர்கள் ஜெர்மனி, பிரேசில் கால்பந்து வீரர்களுக்கு கட்-அவுட் அமைத்து கொண்டாடினர். மேலும் கேரளாவை சேர்ந்த வீரர்கள் பலரும் பல்வேறு கால்பந்து அணிகளிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார்கள்.

    அதோடு கேரளாவில் கால்பந்து போட்டிகள் நடந்தாலும் அதனை காண ஏராளமானோர் திரண்டு வருவார்கள். மேலும் கால்பந்தில் சாதனை படைக்கவும் அவர்கள் அடிக்கடி முயற்சி செய்வது வழக்கம்.

    அந்த வகையில் பெனால்டிக் கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி ஒன்று நேற்று நடந்தது. மஞ்சேரி பையநாடு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதில் காலை 7.38 மணிக்கு பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்தம் 4500 பெனால்டிக் கிக் அடிக்கப்பட்டது.


    இரவு 7.38 மணிக்கு இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை மந்திரி பெனால்டிக் கிக் அடித்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார். இதற்கு முன்பு ஜெர்மனியில் 2500 பெனால்டிக் கிக் அடித்ததே சாதனையாக இருந்தது.

    நேற்று நடந்த நிகழ்ச்சி மூலம் இந்த சாதனையை கேரள இளைஞர்கள் முறியடித்து உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.

    ×