search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. பிரமுகர் கொலை"

    • இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
    • கழுத்தை அறுத்து உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33).

    இந்நிலையில் முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். அதை திருப்பி கொடுத்த நிலையில் ரூ.1000 மட்டும் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனிடையே கடந்த 25-ந் தேதி ராஜசேகரும், அவரது நண்பருமான அணைக்கரைப் பட்டியை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபனும் டி.கல்லுப்பட்டி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தனது நண்பர்கள் சரவணன், பூமர் சரவணன், சங்கர் ஆகியோருடன் வந்த மணி ராஜசேகர் மற்றும் பென்னி என்ற பார்த்திபனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் மற்றும் சிலர் முருகேசனின் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டுள்ளனர். தலையை டி.கல்லுப்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள மதுக்கடையில் வைத்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் முருகேசனின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் முருகேசன் கொலை தொடர்பாக ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் இன்று கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தொழில் போட்டியா? என போலீசார் சந்தேகம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள லத்தேரி அடுத்த பி. என். பாளையம் புதூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 41) தி.மு.க. பிரமுகரான இவர் பல ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கம்பெனி நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது கம்பெனியை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வழியில் மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் நாகேஷின் கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாகேசை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    லத்தேரி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட நாகேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலையில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×