search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டிக்கு"

    • இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.
    • மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை சேர்ந்த 60 வயதான பெண் ணுக்கு சூலகப் புற்றுநோய் (ஒவேரியன் கேன்சர்) இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில், திருவனந்த புரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

    வழக்கமான கீமோதெரபி செயல்முறை பயனேது மின்றி தோல்வியடைந்திருந்த நிலையில் சூலக புற்று நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் மூதாட்டிக்கு இருந்தது. எனவே, அவருக்கு சிகிச்சை யளிக்க கிம்ஸ் ஹெல்த்தின் அறுவை சிகிச்சை புற்றுநோ யியல் துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் ஒருங்கி ணைப்பாளரான டாக்டர் ஜெயானந்த் சுனில் தலைமை யின் கீழ் மருத்துவர்கள் குழு, பி.ஐ.பி.ஏ.சி. (பிரஷ ரைஸ்டு இன்ட்ராபெரிட் டோனியல் ஏரோசோ லைஸ்டு கீமோதெரபி) மருத்துவ செயல்முறையை தேர்வு செய்தது.

    சுவாச சிரமம் இருக்கும் போது நுரையீரல்களுக்குள் எப்படி நேரடியாக மருந்துப் பொருளை இன்ஹேலர்கள் உட்செலுத்துகின்றனவோ அதே போன்ற செயல் முறையே இது. இந்த மருத் துவமுறை அதிக பயனளிக்கும் திறன் கொண்டதா கவும், கூடுதல் பாதுகாப்பானதாகவும் செயல்படுகிறது. அத்துடன், வழக்கமான கீமோதெரபி சிகிச்சை முறையில் நிகழும் பக்க விளைவுகளை விட, இதில் மிக குறைவான பக்க விளைவுகளே ஏற்படக்கூடும் என்பது இதன் சிறப்பாகும்.

    மேலும் வயிறு, கருப்பை, பெருங்குடல் மற்றும் சூலக உறுப்புகளில் உருவாகியிருக்கும் முதிர்ச்சியடைந்த புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மிகச்சிறிய துளை வழியாக அழுத்தப்பட்டிருக்கும் ஏரோசால் (மருந்தை உள்ள டக்கிய கூழ்மம்) வடிவில் கீமோதெரபியை இந்த மருத்துவ முறை வழங்கு கிறது. இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.

    இந்த புதுமையான மருத் துவ செயல்முறை வெற்றியடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பிறகு சிஸ்டமிக் கீமோ தெரபியோடு சேர்த்து மருத்துவ செயல்முறையின் அதிக அமர்வுகளில் பங்கேற்குமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    புத்தாக்கமான பி.ஐ.பி. ஏ.சி. மருத்துவ செயல் முறையை மேற்கொள்வ தற்கு அங்கீகாரம் அளிக்கப் பட்ட மற்றும் இதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற ஒரே மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயானந்த் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள ஐ.எஸ்.எஸ்.பி.பி. மருத்துவமனையில் இந்த செயல் முறைக்கான நிபுணத்துவ பயிற்சியையும் டாக்டர் ஜெயானந்த் பெற்றிருக்கிறார்.

    • அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
    • தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு ரேசன் கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த குப்பம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வந்திருந்தார்.

    அப்போது அவருக்கு பரிசு பொருட்கள் மட்டும் கொடுத்து பணம் வழங்க வில்லை என அந்த மூதாட்டி புகார் கூறினார்.

    இது பற்றி அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி யின் கணவர் விஸ்வநாதனிடம் அந்த மூதாட்டி கூறினார். இதையடுத்து அவர் ரேசன் கடைக்கு வந்து இது குறித்து விசாரித்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் அங்கு பணத்தை சரி பார்தனர். இதில் பணம் சரியாக இருந்தது. மற்ற குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. மேலும் மூதாட்டி பணம் தவற விட்டதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.

    இதை கண்ட அங்கு இருந்த பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியின் மனிதநேய செயலை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ×