என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு இடைத்தேர்தல்"
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காயத்ரி ரகுராமை அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கினார்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.
சென்னை:
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் இன்று தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
- ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
- 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
- தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை 8-ந் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெற 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதனைத்தொடர்ந்து 27-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படம், சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை மறைக்கும் பணி தொடங்கிவிட்டன.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயர் போர்டு துணியால் மூடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் இருந்த பல்வேறு கல்வெட்டுகளும் அகற்றப்பட்டும், பேப்பர் கொண்டும் மூடப்பட்டன. அலுவலக வளாகம், கூட்டரங்கம் போன்றவற்றில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈ.வெ.ரா. போன்றோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
இது தவிர அரசின் திட்ட விழிப்புணர்வு பேனர்கள் டெண்டர்கள் உள்ளிட்ட விளம்பர நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன. கட்டட சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்கள் தலைவர்களின் வாழ்த்து பேனர்கள் அகற்றப்படும் அழித்தும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் தலைவர்கள் படங்கள் மாற்றப்பட்டன. கல்வெட்டுகள் துணியால் மூடி மறைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் சேர்ந்து கிழக்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈ.வி.என்.சாலை, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை, காவிரி சாலை, ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, கருங்கல்பாளையம் காவிரி சாலை போன்ற இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி மரங்கள், பேனர்களை அகற்ற தொடங்கி உள்ளனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஈரோடு ஜி.எச்.ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளும் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி வளாகம் உட்பட அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள், பெயர், படங்கள் அகற்றவும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலக கட்டிடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு அந்த எந்திரங்கள் சரி பார்த்து பழுது இருந்தால் நீக்கம் செய்து தயார் நிலைப்படுத்தப்படும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், அச்சமின்றி நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
- வாக்களிக்க வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித்தொழிலின் மையமாகத் திகழ்கிறது. துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.
இங்கு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.
இங்கு நடைபெறும் ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறும்.
2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.
தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்று உள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும் வெற்றி பெற்றனர்.
2011 தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தே.மு.தி.க.வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.
இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1546 வாக்குகளும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்து குமரனுக்கு 1204 வாக்குகளும் கிடைத்தது.
திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது இந்த தொகுதிக்கு முதல்முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 ஓட்டு வித்தியாசத்தில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இந்தநிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்தார். அதே போல் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த அ.தி.மு.க. கூட்டணியும் எப்படியும் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்க சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.
- ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திருமகன் ஈ.வெ.ரா. திடீரென மரணம் அடைந்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
ஈரோடு:
ஈரோடு சட்டமன்ற தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு மறுசீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆனார்.
அதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசும், 2021-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா.வும் வென்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திருமகன் ஈ.வெ.ரா. திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 440 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளன. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்படுகின்றன.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 23-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.
தலைமை நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களும், 87 மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்படுகின்றன. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது எத்தகைய முடிவை மேற்கொண்டால் சாதகமாக இருக்கும்.
இரு அணிகளாக பிரிந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் பட்சத்தில் போட்டியாக வேட்பாளரை நிறுத்தலாமா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கேட்கிறார்.
தனியாக வேட்பாளரை நிறுத்தினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார்.
உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அக்கூட்டத்தில் அவரது சார்பாக 2 பேர் சமீபத்தில் பங்கேற்று வந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டு உள்ளது.
சூரம்பட்டி:
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா. எம்.எல்.ஏ. கடந்த 1 1/2 ஆண்டுகளாக பொதுமக்கள் பாராட்டும் வகையில் அவர்களது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் திடீரென்று கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் இறந்து 15 நாட்களுக்குள் இடைதேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.
வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியலில் ஆர்வம் உள்ள பொதுமக்களிடையேயும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தாலும் வேட்பாளர் யார்? என்பதை தி.மு.க. உற்று கவனிக்கிறது. மறைந்த திருமகனின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதை தி.மு.க. விரும்புகிறது.
அனுதாபம் மற்றும் அந்த தொகுதியின் செல்வாக்கு காரணமாக இளங்கோவன் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தி.மு.க.-காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏற்கனவே கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல கோபி எம்.பி. தொகுதியில் 2004-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணைய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டு உள்ளது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா? அப்படி காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று கேட்டபோது, இது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்று மழுப்பலாக கூறினார்.
காங்கிரசில் வேட்பாளரை முடிவு செய்வதை இளங்கோவனிடமே விட்டுள்ளனர். அவரை போட்டியிடுமாறு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தி வருகிறார்கள்.
இளங்கோவனோ அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே போட்டியிட விரும்பாத நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மக்கள் நேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனை செய்து வருகிறார்.
- கமல்ஹாசன் மூத்த நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை செய்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிட மும்முரம் காட்டி வருகின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே நடந்த தேர்தல்களில், தனித்தும், கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனை செய்து வருகிறார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. தேர்தல் களத்தில் இறங்குவதற்கு கமல்ஹாசன் யோசனையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் மூத்த நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை செய்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளார். ஆலோசனைக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம் இறங்குகிறது.
- தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வோம்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியை பொருத்தவரை தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டே வருகிறது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம் இறங்குகிறது. தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வோம். நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.