என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிப்பெயர்ச்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
    • சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.

    • ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
    • இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றி சாகா நெறியில்

    இச் சகம் வாழ இன்னருள் தா தா

    நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் 17.1.2023 செவ்வாய் கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில்(காலபுருஷ10ம் ராசி) அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து மற்றொரு சொந்த வீடான கும்ப ராசி (காலபுருஷ11ம் ராசி) அவிட்டம் 3ம் பாதம் சென்று ஆட்சி பலம் பெறப்போகிறார்.

    சனி பகவான் தனது 3ம் பார்வையால் காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் உள்ள ராகுவையும் ஏழாம் பார்வையால் காலபுருஷ ஐந்தாம் ராசியான சிம்மத்தையும் பத்தாம் பார்வையால் காலபுருஷ அஷ்டம ஸ்தானமான விருச்சிகத்தையும் பார்வையிடு கிறார்.

    சனிப் பெயர்ச்சி அனைவருக்கும் கெடுபலன் தராது. அவரவரின் சுய ஜாதகத்தில் நடப்பில் உள்ள தசை புத்திக்கு ஏற்ற சுப, அசுப விளைவுகளே நடக்கும். எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

    பரிகார ராசிகள்:

    கடகம் - அஷ்டமச் சனி

    சிம்மம் - கண்டகச் சனி

    விருச்சிகம் - அர்தாஷ்டமச் சனி

    மகரம் - பாதச் சனி

    கும்பம் - ஜென்மச் சனி

    மீனம் - ஏழரைச் சனி ஆரம்பம்

    கடக ராசியினர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் சென்று வழிபடவும்.பிற 5 பாரிகார ராசியினர் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட வேண்டும்.

    மேஷம் - லாபச் சனி

    ரிஷபம் - தொழில் சனி

    மிதுனம் - பாக்கியச் சனி

    கன்னி - ரோக ஸ்தான சனி

    துலாம் - பஞ்சம சனி

    தனுசு - சகாய ஸ்தான சனி

    இந்த ராசியினர் சனிக்கிழமை சிவன் கோவிவில் உள்ள கால பைரவரை வழிபட நன்மைகள் இரட்டிப்பாகும்.

    அதே போல் சனிப் பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.ஏப்ரல் 22, 2023ல் ஏற்படப் போகும் குருப்பெயர்ச்சியால் உலகிற்கு பல்வேறு சுப பலன்களும் உண்டாகும். சில மாதங்கள் ராகு குருவை கிரகணப் படுத்தினாலும் மீதமுள்ள மாதங்களில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டு.

    மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஆறுதலான விசயம்.

    அனைவரும் தமது கடமையையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வரை நமது செயல்பாடுகளால் பிறரை காயப்படுத்தாமல் வாழும் வரை துன்பம் யாரையும் நெருங்காது. அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது.

    நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும்.

    ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. சனி பகவான் காற்று ராசியான கும்பத்தில் சஞ்சாரம் செய்வதால் பரிகாரங்கள் பாரயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.

    ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்

    கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி

    இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
    • சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகையாற்றின் கிழக்கு கரையில் அமைந்து விசாக நட்சத்திர தலமாக விளங்கி வரும் சனீஷ்வரர் கோவிலில் திருகணித பஞ்சாங்கபடியான வக்கிர நிவர்த்தி விழா நடந்தது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு நேற்று மாலை 6.45. மணியளவில் பெயர்ச்சி ஆனார். இந்த நிகழ்வையொட்டி அர்ச்சகர் ராமசுப்பிரமணி தலைமையில் யாகவேள்வி தொடங்கியது. பின்னர் மாவலிங்கம் தலவிருட்சமாக உள்ள மூலவர் சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் பெயர் ராசிக்கு பரிகாரம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த வக்கிர பெயர்ச்சியையொட்டி கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் ஆவார்கள். இதில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.
    • திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறாா்கள்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்படி, இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது என்றும், அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தேதி, நேரம் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக் கிழமை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரி சையாக நடைபெறவுள்ளது.

    அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், ஆடி பூரத்தை முன்னிட்டும், நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்கா லில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை கள் செய்து சாமிதரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
    • 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர். 

    திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவிலில், வருகிற டிசம்பர் 20ந் தேதி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்து வருகிறார்கள். எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காரை க்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேற்று இரவு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி விழா குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், போலீஸ் தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.விழாவில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு, சுமார் 1400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 150-க்கும் மேற்பட்டசி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் பக்தர்களுக்கு மாவட்டம் முழுவதும் இலவச பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 7 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு, கண்காணிப்பு, வழிகாட்டுதல் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு காவல்துறை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்.

    புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒருங்கிணைந்து இந்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து இலவச பஸ்களை அரசு இயக்க உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத வகையில் ட்ரோன் காமிராக்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. காவல்துறை மூலம் "மே ஐ ஹெல்ப் யூ" பூத்கள் பல இடங்களில் நிறுவப்படும். இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.சனிப்பெயர்ச்சியை முன் ஏற்பாடுகள் தவிர, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், போதைப்பொருள் ஒழிப்பிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு பல்வேறு வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் காலி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மேலும், கல்வித்துறையில் தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வது தற்காலிக நடவடிக்கைதான். புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்து, அரசாணை வெளிவந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் இணைய கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும். இந்த 3 மாதங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல், வலுப்பெறுவதற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது. மிக விரைவில் கல்வித்துறையில் அத்தனை காலியிடங்களை நிறைவாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
    • வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்தசாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா மாவங்களில் கனமழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், குறைவான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை மிக எளிமையாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். 

    • 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா.
    • சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

    பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300-ம் சிறப்பு ஒரு மண்டல (48நாட்கள்) அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.
    • பெண்களுக்கான சிறப்பு ராசிபலன்கள்.

     

    மேஷம்

    இந்த சனிப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப் போகின்றது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். புராதனக் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்கக் கேட்ட உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும். சுய ஜாதக அடிப்படையில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சொந்தங்கள் போற்றும் விதம் வாழ்வமையும்.

     ரிஷபம்

    இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

     மிதுனம்

    இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும். இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகப்பணியாளர்களின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

     கடகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வது உத்தமம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவெடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் உருவாகலாம். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

     சிம்மம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தடுத்து விரயங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகளையும் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.

     கன்னி

    இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்திலேயே அமைகின்றது. குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியிலும். தாய் வழியிலும் உதவிகள் கிடைக்கும். கடன்சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும், வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

     துலாம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்பட எதிர்மறை கருத்துக்களைத் தவிர்த்து நேர்மறை கருத்துக்களை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப்பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர். பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

     விருச்சிகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக வரவிற்கேற்ற செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தன்னம்பிக்கையும், தைரியமும், அயராத உழைப்பும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் உறவு பலம்பெற விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாள முயற்சி எடுப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

     தனுசு

    இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது. பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கல்யாணக் காரியங்களில் இருந்த தடைகள் அகலும். நட்பால் நல்ல காரியங்கள் நடக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தடுமாற்றங்களும், தடைகளும் அகலும். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். வீடு வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

     மகரம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவால் பெண்களுக்கு செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் அடுத்தடுத்து நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தருவதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர்.

     கும்பம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீடு மாற்ற மும், இட மாற்றமும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து செயல் பட்டால் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்படிப்பின் விளைவாகவோ, வேலையின் நிமித்தமாகவோ வெற்றி உண்டு. உடன்பிறந்தவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கலாம். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக் கொள்ளலாம் என்பதால் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் நன் மையை வழங்கும்.

     மீனம்

    இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாக உங்களுக்குத் தொடங்குகின்றது. எனவே எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் விரும்பும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. நீங்கள் என்னதான் சிறப்பாகப் பணிபுரிந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சனிக்கிழமை விரதமும், சனி பகவான் வழிபாடும் நன்மை தரும்.

    • கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்’ என்பது பழமொழி.
    • பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    * `கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்' என்பது பழமொழி. `நீதிமான்' என்றும், `நியாயவான்' என்றும், போற்றப்படும் சனி தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் பொழுது நீதி, நியாயம் கிடைக்க போராட்டங்கள் அதிகரிக்கும். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.

    * அரசியல் சதுரங்கத்தில் கட்சித்தாவல்கள் அதிரடியாய் அமையும். அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களம் சவாலான போட்டியாக அமையும். ஆயினும் முடிவில் மக்கள் விரும்பியபடி நல்லாட்சி அமையும்.

    * முற்காலத்தில் `குடங்களை' சுமந்த பெண்கள், இக்காலத்தில் 'மகுடங்களை' சுமக்க, கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியின் பலத்தால் வழிபிறக்கும். அரசியல் களத்தில் பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    * தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை நினைக்க இயலாத அளவிற்கு உயரும். திடீர், திடீரென விலை குறைவது போல் தோன்றி மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

    * பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை சனிப்பெயர்ச்சி காலத்திலிருந்து இறங்கு முகமாக இருக்கும். ஆயினும் ஜூன் மாதத்திற்கு மேல் விலை ஏறிக்கொண்டே சென்று உச்சத்தைத் தொடும்.

    * சனியின் வக்ர காலத்திலும், செவ் வாய், சனியோடு சம்பந்தப்படும் நேரத்திலும் கடல் கொந்தளிப்பு, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உலக நாடுகளுக்குள் பிரச்சினைகள் தலைதூக்கும்.

    * புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையினைச் சேர்ந்தவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    * செந்நிறக் காய்கறிகள், வெள்ளைநிற உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும்.

    • இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும்.
    • சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக வருகின்றது.

    `மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்' என்பது பழமொழி, அப்படிப்பட்ட சனி பகவான் இப்பொழுது பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குச் செல்கின்றார்.

    கும்பச் சனியின் சஞ்சாரம்!

    சனி பகவான் சுபஸ்ரீ சோபகிருது வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (20.12.2023) புதன்கிழமை அன்று மாலை 5.23 மணி யளவில் அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தன் சொந்த வீடான கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார். அங்கு 6.3.2026 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார்.

    அவரது அருட்பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பதிகின்றது. இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும். இந்த சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக வருகின்றது.

    சிம்ம ராசிக்கு கண்டகச் சனியாக வருகின்றது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வருகின்றது. மகர ராசிக்கு குடும்பச் சனியாகவும், கும்ப ராசிக்கு ஜென்மச் சனியாகவும் வருகின்றது. மீன ராசிக்கு ஏழரைச் சனியாக வருகின்றது.

    இதுவரை அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த மிதுன ராசிக்கு அது விலகுகின்றது. கடக ராசிக்கு கண்டகச்சனி விலகுகின்றது.

    துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், தனுசு ராசிக்கு ஏழரைச் சனியும் விலகுகின்றது.

    சனி விலகும் ராசிக்காரர்கள், நள சக்கரவர்த்திக்கு சனி விலகி அருள் கொடுத்த தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது.

    குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகள்!

    இந்த சனியின் சஞ்சார காலத்தில் 2 முறை குருப்பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. 1.5.2024-ல் ரிஷப ராசியிலும், 11.5.2025-ல் மிதுன ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இடையில் 8.10.2025 முதல் 20.12.2025 வரை வக்ர இயக்கத்தில் கடக ராசிக்குச் செல்கின்றார்.

    26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். இடையில் இரண்டு முறை கும்ப ராசியில் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு 12 ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    வளர்ச்சி தரும் வழிபாடு!

    உங்கள் ஊருக்கு அருகிலுள்ள சிவாலயங்களில் இருக்கும் சனி பகவானையும், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்அருகில் உள்ள பெருச்சிக் கோவில், நல்லிப்பட்டி, திருக்கொடியலூர் போன்ற சிறப்பு தலங்களில் உள்ள சனி பகவானையும் வழிபடலாம்.

    சனிபகவான் ஆட்டிவைக்கும் கிரகம் அல்ல, அரவணைக்கும் கிரகம் என்பதை அறிந்து கொள் ளுங்கள். நல்லதே நடக்கும்.

    ×