என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்குவங்கம்"

    • திலீப் கோஷ் தனது 60 ஆவது வயதில் 51 வயதான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்துள்ளார்.
    • ரிங்கு மஜும்தாருக்கு இது 2 ஆவது திருமணமாகும்.

    மேற்கு வங்க பாஜகவின் முன்னாள் தலைவரான திலீப் கோஷ், அவரது கட்சியை சேர்ந்த ரிங்கு மஜும்தார் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வந்த திலீப் கோஷ் தனது 60 ஆவது வயதில் 51 வயதான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்துள்ளது அம்மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த தம்பதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    திலீப் கோஷுக்கு தான் இது முதல் திருமணம். ரிங்கு மஜும்தாருக்கு இது 2 ஆவது திருமணமாகும். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

    திருமணத்திற்கு பின்பு பேசிய திலீப் கோஷ், "என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எனது தனிப்பட்ட வாழ்க்கை எனது அரசியல் வாழ்க்கையை பாதிக்காது. தற்போது திருமணம் செய்து கொண்டதன் மூலம் தனது தாயின் நீண்டகால விருப்பம் நிறைவேறியுள்ளது" என்று தெரிவித்தார். 

    • வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில் போராட்டம் நடைபெற்றது.

    வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதா பாத், சுதி, அம்தாலா, துலியன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு பிரிவினர் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர்.

    நிம்நிதா ரெயில் நிலையத்தில் அவர்கள் பல மணி நேரம் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரெயில் மீது சரமாரியாக கற்களையும் வீசினார்கள். ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். இதையடுத்து வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் 10 போலீசார் படுகாயம் அடைந்தனர். சில ரெயில் பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

    இந்த வன்முறையால் அப்பகுதி வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் திருப்பி விடப்பட்டது. சர்வ தேச எல்லையில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    • வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
    • தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

    இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

    அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.

    வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது.

    தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

    மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "என்னை நம்பி அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில காரணங்களால் என்னால் அசன்சோல் தொகுதி தேர்தலில் போட்டியிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதில் மேற்குவங்கத்தில் 20 வேட்பளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டது. அப்பட்டியலில் அசன்சோல் தொகுதி வேட்பாளராக பவான் சிங் அறிவிக்கப்பட்டார்.

    "பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார். அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அதனால் தான், பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது X பக்கத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில், போஜ்புரி நடிகரான பவான் சிங் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.


    • 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு 1 மாதம் சிறை தண்டனை
    • முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும்

    மதுபோதையில், பெண் காவலரிடம் 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் 1 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

    துர்கா பூஜையை ஒட்டி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, லால் டிக்ரே பகுதிக்கு காவலர்கள் சென்று கொண்டிருந்தனர். வேபி ஜங்ஷன் வழியாக வந்த காவல்துறையினருக்கு, அப்பகுதியில் ஒருவர் பிரச்சனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தில பிரச்சினை செய்த ஜனக் ராம் என்ற நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் ஜனக் ராம், ஒரு பெண் காவலரிடம் 'ஹாய், அன்பே, அபராதம் விதிக்க வந்தீர்களா?' என கேட்டுள்ளார். இது தொடர்பாக மாயாபந்தர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

    கடந்த வருடம், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஜனக் ராமிற்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜனக் ராம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

    அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும். குறிப்பாக , குடித்திருக்கும் ஒரு ஆண், முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இன்னமும் தீவிரமான குற்றம் என கருத்து தெரிவித்தது.

    பின்னர், குற்றவாளியின் 3 மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.
    • திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்?

    கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பை இன்று ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய், வரும் 7-ம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.

    வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தேசிய கட்சி பாஜக தான். அதனால் தான் வரும் மார்ச் 7ஆம் தேதி நான் பாஜகவில் சேர இருக்கிறேன். இதற்காக நான் நீண்ட நாட்கள் யோசிக்கவில்லை. சுமார் 7 நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இப்போது பாஜகவில் சேர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். அதில், "திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்? நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளை இவர் கேவலப்படுத்தி இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகி, ஒரு அரசியல் கட்சியில் சேர்கிறார்கள் எனில், அவர்கள் அதுவரை நீதி வழங்காமல் அக்கட்சிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றே அர்த்தம்" என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன்.
    • திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.

    மேற்கு வங்காள பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்

    இதன் பின்னர் பேசிய அபிஜித், "பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என்னால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்

    மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவை தேர்தலில் உருவாக்குவதே எங்களின் பிரதான நோக்கம். மேற்கு வங்காளம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம். திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார்.

    இந்நிலையில் பாஜகவில் சேர்ந்த அபிஜித் வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    • கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.
    • அபிஜித் பாஜக சார்பாக தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்து பாஜகவில் சேர்ந்தார்.

    பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அபிஜித் கீழ்த்தரமான விமர்சனம் செய்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்?
    • மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது.

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர்ந்தார்.

    பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித், "மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்? உங்கள் விலை ₹10 லட்சம். ஏனென்றால் நீங்கள் மேக் அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது" என்று இழிவாக பேசியுள்ளார்.

    இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    • அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் குற்றாவாளியை தேடி வருகிறது.

    • திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர்.
    • இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்த எதிர்க்கட்சிகள் மேற்குவங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் நிலவுவதாக விமர்சித்தனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிர்ந்து மேற்குவங்கத்தில் தலிபான் கலாச்சாரம் நிலவுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்தில் நடந்துள்ளது

    இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட தஜிமுல் இஸ்லாம் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

    திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் தனது காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் ஊருக்கு திரும்பிய போது அவள் தனது கணவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

    அந்த பணத்தை அப்பெண் கட்ட தவறியதால் தஜிமுல் இஸ்லாம் அப்பெண்ணை தாக்கியுள்ளார். தஜிமுல் இஸ்லாம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருணால் கஹோஷ் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். மேற்குவங்கத்தில் இத்தகைய சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்றும் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

    • கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார்.
    • பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஓய்வு பெற்ற மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ஆர்யா இன்று அம்மாநில பாஜகவில் இணைந்துள்ளார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோ பாஜகவின் இணைந்த இரண்டு மாதத்தில் மேலும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பாஜகவில் இணைந்துள்ளார்.

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

    ×