search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாடி-வினா"

    • நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மரம் நடும் விழா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சபி சுலை மான், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், மாஞ்சோலை துரை, நெட்டூர் கிளைச் செயலாளர் கணேசன், மகேஷ் பாண்டியன், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.
    • வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு மருத்துவர் அனிதாபாலின் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் மீனாட்சி, குழந்தைகள் நல மருத்துவர்கள் முரளிதரன், ராஜ்குமார், பொதுநல அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணகுமார் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர், செவிலியர்கள், மருத்துவ மனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பா லின் அவசியம் குறித்து பேசினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சந்தேகங்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்குமார் விளக்க மளித்தார். மருத்துவர் மீனாட்சி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடக்கிறது.
    • முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா மன்றம் சார்பில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடந்தது.

    வணிகவியல் துறை தலைவர் எம்.குருசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இந்த வினாடி-வினா போட்டி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பலதரப்பட்ட போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு மாணவர்களுக்கு உதவும் என்றார்.

    வினாடி-வினா மன்ற ஒருங்கிணைப்பாளர்- வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.கீதா போட்டியை நடத்தினார். வினாடி-வினா போட்டி 2 சுற்றுகளாக நடந்தன. முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    அதில் 23 குழுக்களாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெ ண்கள் அடிப்படை யில் 8 குழுக்கள் தேர்ந்தெடு க்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் வரலாறு, பொது அறிவு, அரசியல் மற்றும் விளையாட்டு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.போட்டியின் முடிவில் முதல் பரிசை 3-ம் ஆண்டு வணிகவியல் துறை (நிறுமச் செயலர்) மாணவிகளான ஆர்.ஜனனி, எஸ்.சுவாதி ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவிகள் எம்.தேவதர்சினி, கே.எம்.ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    3-ம் பரிசை 2-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் ஆர்.விஷ்வா, முதலாமாண்டு வேதியியல் துறை மாணவர் எம்.மணிபாலன் ஆகியோர் பெற்றனர். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்

    கே.தினேஷ் குமார் வரவேற்றார். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜி.பால சுந்தர் நன்றி கூறினார்.வினாடி-வினா, காளீஸ்வரி கல்லூரி, Quiz, Kalishwari College

    ×