search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல்குளம்"

    • உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் துணி வியாபாரம் செய்து வருபவர் அர்ஷத் (32). இவர் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சனை கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது. பேசிக்கொண்டிருந்த போதே அர்ஷத் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட்டத்தில் சம்பவ இடத்திலேயே அர்ஷத் உயிரிழந்தார்.

    அப்போது அவரது மகன்கள் உடன் இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது .சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்கு நடத்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியவராத நிலையில் நீச்சல் குளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    • கவினா சி.பி.எஸ்.சி. பள்ளியில் உலகத்தரம்வாய்ந்த நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மேலும் விடுதி வசதியும் வருகிற 27-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கவினா சி.பி.எஸ்.சி. பள்ளியில் உலகத்தரத்தில் நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவ மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு நீச்சல் போட்டிகளும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பள்ளியில் குதிரை பயிற்சி, சிலம்பம், யோகா உள்பட விளையாட்டு பயிற்சிகள், ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

    நீச்சல்குளம் பற்றி பள்ளியின் தாளாளர் கண்ணதாசன் கூறுகையில், நீச்சல்குளத்தை பராமரிக்க ஒரு மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் செலவாகிறது. விடுமுறை தினங்களில் பொதுமக்கள் நீச்சல்குளத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி வரை உள்ள இந்த பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் விடுதி வசதியும் வருகிற 27-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இங்கு உலகத்தரத்தில் பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ×