என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. Gram Sabha meeting"
- ராஜபாளையம் அருகே கிராமசபை கூட்டம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூ ரில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தங்கபாண்டியன்
எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 6 முறை யாக மாற்றியவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர். கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து பொது மக்கள் அளித்த கோரிக்கை கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். இதில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, துணை சேர்மன் துரை கற்பகராஜ், கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல்கனி, கிளை செயலாளர்கள் சின்னதம்பி, சீதாராமன், வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
- காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் 74-வது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரி க்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். கோரவள்ளியில் கலை யரங்கம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளி த்தார்.
மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சண்முக நாதன், கோரவள்ளி ஊராட்சி தலைவர் கோகிலவாணி சிவஞானம் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஜே.பிரவின் ஏற்பாட்டில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரெட்டையூரணியில் புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.
காரான், வழுதூர், வாலாந்தரவை, சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அப்போது 500-க்கும் அதிகமான பொதுமக்களுக்கு வேட்டி,சேலை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், வாலாந்தரவை ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்