search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்ஜெட் தாக்கல்"

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
    • தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    மத்திய பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-

    * தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆகவும், வைரத்திற்கு 6.4 சதவீதம் ஆகவும் குறைக்கப்படுகிறது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சத வீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

    * பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

    * நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    * வருமான வரி செலுத்து வோரிடம் 3-ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.

    * ஆன்லைன் வர்த்தகத் திற்கான டி.டி.எஸ். வரி குறைக்கப்படுகிறது. டி.டி.எஸ். தாக்கல் தாமதம் ஆவது இனி கிரிமினல் குற்றமல்ல.

    * குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

    * 2 முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றப்படும்.

    * வெளிநாடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக வரி குறைக்கப்படும்.

    * உற்பத்தி துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும்.

    * மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை தரப்படும்.

    * 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    * நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப் படும். தீர்ப்பாயம் அமைக் கப்படுவதால் ஏராளமான வழக்குகள் தீர்த்து வைக் கப்படும்.

    * நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    * பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகள் கட்டப்படும்.

    * நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மகளிர் சார்ந்த திட்டங்க ளுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    * 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது
    • கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும்

    கோவை,

    கோவை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான வரவு-செலவு திருந்திய திட்ட அறிக்கை 2023-24 ம் ஆண்டுக்கான உத்தேச திட்ட அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் ஒரே நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை உள்பட மற்ற மாநகராட்சிகளில் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சொத்து வரிஉயர்த்தப்பட்டது. குப்பை வரி வசூலித்திருப்பதால், மாநகராட்சி வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்யும் திருந்திய திட்ட அறிக்கையில் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.

    வருகிற நிதியாண்டில் எதிர்பார்க்கும் வருவாயும், அதிகமாக இருக்குமென எதிர்பார்ப்பதால் மாநகராட்சி பொது நிதியில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கவுன்சிலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

    மண்டல அளவில் வார்டு பணிகளுக்கு கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும். குறுக்கு வீதிகள், சந்துகளில் ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்ட வேண்டும்.

    சங்கனூர் பள்ளத்தை தூர் வார வேண்டும். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டும். உள் விளையாட்டு அரங்கம் ஒதுக்க வேண்டும் என மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

    • திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.
    • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இதில், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் இடம்பெறுகின்றன.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

    ×