என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் கைது"
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், சில்லக்கல்லு போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் செல்போன் வீடியோவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டுள்ளார்.
போலீசாருக்கு 3 மாத சம்பளம் வழங்காவிட்டால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் இருந்து இறக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்படும் எனவும் மேலும் சில அவதூறான வார்த்தைகளை பேசி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார்.
அவர்கள் மேலும் சிலருக்கு வீடியோவை அனுப்பி வைத்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சில்லக்கல்லு போலீசார் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரராவை கைது செய்தனர்.
அவரை ஜக்கையப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆலிசாவுக்கு ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
- முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.
பாஜகவின் திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருப்பவர் ஆலிசா அப்துல்லா.
இவர், தனக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நபரை அவர் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அழைத்து வந்து போலீசிடம் ஒப்படைத்து அதிரடி காட்டியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் இருந்த அந்த நபர், அலிசாவிடம் தன்னுடன் படுக்கவும், தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆலிசா, அந்த நபர் தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று, கையும் களவுமாக பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையே, இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆலீசா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், பெரிய கட்சியில் பதவியில் உள்ள தன்னை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களுக்கு என்ன நிலைமை எனவும் ஆலிசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார்.
- அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார்.
தாஜ் ஓட்டலில் ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாஜ் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சாகிர் அலிக்கு அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் செல்லாத இடத்தில கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வரவே அவர் போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார். அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார். பின்னர் போலீசார் 2 கார்களையும் நிறுத்தியுள்ளனர்.
சாகிர் அலியின் காரின் பதிவு எண் MH01EE2388 என்றும் மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை அடைக்க இஎம்ஐ கட்ட முடியாததால் தனது கார் எண்ணின் கடைசி இலக்கத்தை '8' ஆக மாற்றியதாக மற்றொரு காரின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் மிகப்பெரிய தாக்குதல்களை அடுத்தடுத்து நிகழ்த்தியதை யாரும் மறக்க மாட்டார்கள்.
அரபிக்கடலில் படகு மூலம் வந்த 10 பேர் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல், தெற்கு மும்பையில் புகுந்து பல இடங்களில் தாக்குதல் தொடுத்தது. அந்த சமயத்தில் தாஜ் ஓட்டலில் 6 குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் எண்ணற்றோர் உயிரிழந்தனர்.