என் மலர்
நீங்கள் தேடியது "வினோத் காம்ப்ளி"
- ஆண்ட்ரியா அளித்த புகாரின் பேரில் காம்ப்ளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாந்த்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தாக்குதலில் காயம் அடைந்த ஆண்ட்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் போலீசார் கூறினர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. பள்ளி பருவத்தில் தெண்டுல்கருடன் இணைந்து இவர் உலக சாதனை புரிந்தார்.
வினோத் காம்ப்ளி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். தற்போது மனைவியை அடித்து துன்புறுத்திய வழக்கில் மாட்டியுள்ளார்.
51 வயதான வினோத் காம்ப்ளி மும்பை புறநகரான பாந்த்ரா மேற்கில் மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
காம்ப்ளி தனது வீட்டில் இரவில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து உள்ளார். சமையல் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அவரது மகன் நேரில் பார்த்துள்ளார்.
வினோத் காம்ப்ளி மீது அளித்த புகாரில் அவரது மனைவி இதை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தினர். வினோத் காம்ப்ளி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 324 (ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்), 504 (அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வினோத் காம்பளி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வினோத் காம்ப்ளி 1993 முதல் 2000 வரையிலான காலக்கட்டத்தில் 17 டெஸ்ட் (1087 ரன்), 104 ஒருநாள் போட்டியில் (2477 ரன்) விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நடைபெற்றது.
- வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நண்பருமான வினோத் காம்ப்ளியை சந்தித்து சச்சின் டெண்டுல்கர் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த மறைந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடம் திறப்பு விழா சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரமாகாந்த் விட்டல் அச்ரேக்கரின் நினைவிடத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்த சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரரும் தனது நண்பருமான வினோத் காம்ப்ளியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது வினோத் காம்ப்ளி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெண்டுல்கரும், காம்ப்ளியும் பள்ளி பருவத்தில் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தெண்டுல்கர் நண்பர் வினோத் காம்ப்ளியின் உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
- காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹால் பாதிப்பு இருந்தது.
தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சிக்கு முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி வந்து இருந்தார். அங்கு அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பால்ய நண்பர் தெண்டுல்கரை அணைத்து கண்ணீர் விட்ட வீடியோ வைரலானது.
காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹால் பாதிப்பு இருந்தது. இவரது இந்தப் பழக்கம் நண்பர்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது.
இந்நிலையில் 1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர்கள் வினோத் காம்ப்ளிக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளனர். ஒரு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளதாக முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக கூறும்போது "கபில்தேவ் என்னிடம் தெளிவாக ஒன்றைச் சொன்னார். மறுவாழ்வு சிகிச்சைக்கு வினோத் காம்ப்ளி தயார் என்றால் நிதிரீதியாக நாம் உதவுவோம். அவர் முதலில் மறுவாழ்வு சிகிச்சைக்கு தன்னை ஒப்படைக்க வேண்டும். என்ன செலவாகிறதோ அதைக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், சிகிச்சை எத்தனை நாட்களுக்கு நீடித்தாலும் கவலையில்லை" என்றார்.
இப்போதைக்கு காம்ப்ளி பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அளிக்கும் ரூ.30,000 ஓய்வூதியத்தை மட்டும்தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்.
1983 உலகக்கோப்பை வெற்றி நாயகர்கள் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு மறைந்த கெய்க்வாட்டிற்கு உதவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
- சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது ரசிகர்களில் ஒருவரால் வினோத் காம்ப்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
உடல் நலம் பதிக்கப்பட்டுள்ள உள்ள வினோத் காம்ப்ளி சமீபத்தில் அங்குள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.
- சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளியின் உடல் நிலை குறித்து அவரது நண்பர் மார்கஸ் கௌடோ தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார். எனினும், அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வினோத் காம்ப்ளியின் மருத்துவ செலவுகளை வேறொருவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"காம்ப்ளி தற்போது நலமாக உள்ளார். அவர் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கச் சொன்னேன். அவருடைய சிகிச்சைக்கு ஒருவர் பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறார். பிறகு ஏன் சிகிச்சை அளிக்காமல் இருக்க வேண்டும்?" என்று மார்கஸ் தெரிவித்தார்.
- உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் காம்ப்ளி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
- உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார். மேலும் அவர் மருத்துவமனையில் கிரிக்கெட்டும் விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
- பிசிசிஐ வினோத் காம்ப்ளிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது.
- கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
- வினோத் காம்ப்ளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது.
- அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி. மது போதையால் தனது வாழ்க்கையை தொலைத்த வினோத் காம்ப்ளி, தற்போது எழுந்து நிற்கவே கஷ்டப்படுகிறார். இந்த சூழலில் தானேவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வினோத் காம்ப்ளி வீடு திரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில் வினோத் காம்ப்ளி இரண்டாவது மனைவியான ஆண்ட்ரியா அவரை விவகாரத்து செய்ய இருந்ததாக கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வினோத் காம்பிளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவரை விட்டு பிரிய நான் முடிவெடுத்தேன். ஆனால் நான் அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவருக்கு உதவி செய்ய யாருமே இருக்க மாட்டார்கள்.
வினோத் காம்ப்ளி ஒரு குழந்தை போன்றவர். அவரை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கின்றது. அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதுபோல் ஒரு சூழ்நிலையில் ஒரு நண்பரை கூட என்னால் பிரிந்து செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது வினோத் காம்ப்ளி நண்பரைவிட என் வாழ்க்கையில் மேலானவர்.
ஆனால் என் வாழ்க்கையில் பல சமயங்களில் வினோத் காம்ப்ளியை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நான் பலமுறை நினைத்து இருக்கிறேன். ஆனால் நான் அப்படி சென்றால் எனக்கு அது கவலையை கொடுக்கும். வினோத் காம்ப்ளி சாப்பிட்டாரா? இல்லையா? அவர் சரியாக படுத்து தூங்குகிறாரா? இல்லையா? இப்போது அவர் எப்படி இருக்கின்றார் என்றெல்லாம் எனக்கு தோன்றும்.
உடனடியாக நான் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க சென்று விடுவேன். வினோத் காம்ப்ளிக்கு நான் முக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய மகனும் எங்கள் குடும்ப நிலையை பற்றி புரிந்து கொண்டிருக்கிறார். உனக்கு தந்தையும் நான் தான், தாயும் நான் தான் என்பதை மகன் கிறிஸ்டியானோவிடம் சொல்லி புரிய வைத்திருக்கின்றேன். வினோத் காம்ப்ளியின் தந்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.
என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.