என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளியில் அறிவியல் கண்காட்சி"
- ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
- வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.
பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.
- கல்வி அதிகாரி நேரில் ஆய்வு
- மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு
வந்தவாசி:
வந்தவாசியில் தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் செயல் திறன் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இருக்க சென்சார் மூலம் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கதவுகளில் சென்சார் பொருத்தப்பட்டு செல்போன் மூலம் தானாக அன்லாக் செய்வது குறித்து பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட படைப்புகளை இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் நேரில் பார்வை யிட்டார். அப்போது மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.