search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயல் என்ஃபீல்டு"

    • ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது.
    • புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை எக்ஸ் ஷோரூமில் ரூ.2.39 லட்சத்தில் தொடங்குகிறது.

    தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 இன் வடிவமைப்பு அதிநவீன ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டியர்டிராப் வடிவ பெட்ரோல் டேங்க் உள்ளது. இத்துடன் மெலிதான டெயில் பகுதி பெற்றுள்ளது.

    சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் பில்லியனுக்கு ட்யூபுலர் கிராப் ஹேண்டில் உள்ளது. மொத்தத்தில் கெரில்லா 450 அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த பைக்: ஃப்ளாஷ், டாஷ் மற்றும் அனலாக் ஆகிய மூன்றுவகை வண்ணங்களாக பிரிக்கப்படுகின்றன.

    ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெறுகிறது. டாஷ் வேரியண்ட் கோல்ட் டிப் மற்றும் பிளேயா பிளாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அனலாக் கீழ் ஸ்மோக் மற்றும் பிளேயா பிளாக் கொண்டுள்ளது.


    இந்த பைக்கில் 452சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 8,000ஆர்பிஎம்மில் 39.50 ஹெச்பியையும், 5,500ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பிரேக்கிங் வேலைகளை இரட்டை பிஸ்டன் காலிபருடன் முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் கவனித்துக்கொள்கிறது. பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் 270 மிமீ டிஸ்க் உள்ளது. இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    கெரில்லா 450 ஆனது 1440 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது, அதே சமயம் கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மிமீ ஆகும். இதன் எடை 185 கிலோ ஆகும்.

    அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் எல்இடி விளக்குகள் உள்ளன. புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் சார்ந்த நேவிகேஷன் கூடிய TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் அனலாக் வேரியண்ட் விலை ரூ.2.39 லட்சம், மிட்-ஸ்பெக், டாஷ் வேரியன்டின் விலை ரூ.2.49 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் கிடைக்கிறது. ஃப்ளாஷ் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமில் ரூ.2.54 லட்சத்தில் கிடைக்கும்.

    இந்திய சந்தையில் இந்த பைக் டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.
    • பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது.

    இந்தியர்களின் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல் நிறுவனத்தின் புதுமுகமான கெரில்லா மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் 17-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்த கொரில்லா மாடல் முதற்கட்டமாக ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் மற்றும் சிஇஓ கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    பல பாகங்கள் ஹிமாலயனுடன் பகிரப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு முதன்மையாக கெரில்லா 450 மாடலை ஆன்-ரோடு பயன்பாட்டிற்காக மாற்றியமைத்ததாகத் தெரிகிறது.

    மேலும் இது ADV வெர்ஷனில் இருப்பதை போன்றில்லாமல் என்டரி லெவல் ஹார்ட்வேர் பெற வாய்ப்புள்ளது. புதிய கொரில்லா விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450ஐ விட மலிவு விலையில் கிடைக்கும்.

    புதிய பைக்கில் சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லைட், கணிசமான எரிபொருள் டேங்க் மற்றும் ஒற்றை இருக்கை போன்ற அம்சங்களை கொரில்லா கொண்டுள்ளது.

    சிங்கிள்-பாட் கன்சோல், ஹிமாலயனில் கிடைக்கும் TFT டிஸ்ப்ளே போன்றே இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பை போன்றே உள்ளது. ஹிமாலயன் மாடலில் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் உள்ளது. ஆனால் புதிய பைக்கில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும், இதில் USD ஃபோர்க்கிற்குப் பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டுள்ளது. கெரில்லா 450 இன் எஞ்சின் டியூனிங் உறுதி செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் மாடலில் உள்ள 452சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

    • மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
    • நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

     

    "உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்," என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.

    "ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரவித்தார்.

    • ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய புல்லட் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலின் டிசைன் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது.

    இதோடு முன்புறத்தில் சற்றே நீளமான ஃபெண்டர், டேன்க் வடிவம் சற்று மாற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், க்ரோம் நிறத்தால் ஆன பாகங்கள் மற்றும் பழையபடி பாரம்பரியம் மிக்க டிசைன் உள்ளது.

     

    புதிய புல்லட் 350 மாடலிலும் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீடியோர் 350 மாடல்களில் உள்ளதை போன்றே 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இதன் பேஸ் வேரியண்டில் மட்டும் பின்புறத்தில் டிரம் பிரேக், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இதன் விலை ஹண்டர் 350 மற்றும் கிளாசிக் 350 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் 3-ம் தேதி துவங்குகிறது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க பிரத்யேக குழுக்களை நியமித்து இருக்கிறது.
    • இந்த குழுவில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி இடம்பெற்று இருக்கிறார்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி உமேஷ் கிரிஷ்னப்பாவை நியமித்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக குழு இந்தியா மற்றும் லண்டனில் செயல்பட்டு வருகிறது என்றும் இந்த குழு எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது குறித்த திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 100 முதல் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    இந்த முதலீட்டின் மூலம் பிரத்யேக பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் தற்போதைக்கு L என நிறுவனத்திற்குள் அழைக்கப்படுகிறது. சர்வதேச வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் ஏராளமான வாகனங்களை உருவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் சந்தையில் களமிறங்குவதில் இருந்து ஆண்டுக்கு 1.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 1.8 லட்சம் வாகனங்களை உள்ளடக்கிய வியாபாரம் செய்ய ராயல் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு புது பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த 12 மாதங்களில் இந்த பிளாட்பார்மிற்கான ப்ரோடோடைப் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனத்தை தயார்படுத்தி, அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

    ×