என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டர் ரவிச்சந்திரன்"
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை, முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.
- 14,236 பேருக்கு வழங்கப்பட்ட ரூ.43 கோடியே 7லட்சத்து 14 ஆயிரத்து 42 அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கினார்.
பின்னர், கலெக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-,
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம், 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை, முதல்-அமைச்சர் கடந்த 31.12.2021 அன்று தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களான நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 1,392 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 14,236 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தம் ரூ.43 கோடியே 7லட்சத்து 14 ஆயிரத்து 42 அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தற்கான சான்றிதழ்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் லட்சுமணக்குமார், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சுபாஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறையின் மூலம் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர், பிரேமலதா, சுகாதார பணிகள் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் முரளி சங்கர் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்டத்தில் 1301 அங்கன்வாடி மையங்களில்58,406 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
- குழந்தைகளுக்கு தினமும் 6 வகையான கலவை சாதத்துடன், 3 தினங்கள் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
தென்காசி:
தென்காசி நகராட்சிக்குட்பட்ட சிதம்ப ரேஸ்வரர் கோவில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் 2022-23 திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 1301 அங்கன்வாடி மையங் களில்58,406 குழந்தைகள் பயின்று பயன் பெற்று வருகின்றனர்.
தென்காசி வட்டாரத்தில் 125 மையங்களில் நகராட்சிக்குட்பட்ட புது மனை 5-ம் தெருவில் குழந்தைகள் மையம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இம்மையத்தில் 20 குழந்தைகள் பயன்பெறு கிறார்கள். மேலும், இம்மையத்தில் பயிலும் 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 6 வகையான கலவை சாதத்துடன், 3 தினங்கள் முட்டை யும், தமிழ்நாடு அரசின் மேம்படுத் தப்பட்ட சத்து மாவுக்களும் வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் உடல், மனம், மொழி, அறிவு மற்றும் சமூக பழக்கவழக்கங்களை தூண்டும் செயல்பாடு களுடன் கூடிய முன்பருவ ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற அங்கன்வாடி மையங்களில் தங்களது குழந்தைகளை சேர்த்து சமூகத்தில் நல்ல சிந்தனை மற்றும் செயல்பாடுகள் கொண்ட குழந்தைகளாக வாழ்வில் பயன்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையர் பாரிஜான், பொறியாளர் கண்ணன், இளநிலைப்பொறியாளர் முகைதீன் அபுபக்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் சுனிதா, மஞ்சுளா, நாகூர்மீரான், சங்கர சுப்பிர மணியன், பொன்னம்மாள், லெட்சுமணப்பெருமாள், சுப்பிரமணியன், அபுபக்கர், ரபிக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
- இன்று ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
கடையம்:
கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியின் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கிராமசபை கூட்டம்
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிராமசபைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டனர்.இதற்கிடையே சிறப்பு கிராமசபை கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (17-ந் தேதி) கடையம்பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் இன்றும் கிராமசபைக்கூட்டத்தை 2- வது முறையாக மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ரத்து செய்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- விண்ணப்பிப்பவர்கள் மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- கையுந்துபந்து விளையாட்டில்175 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
விளையாட்டு விடுதிகள்
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி மாணவர் களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி குத்துச் சண்டை, கையுந்துப்பந்து, பளு தூக்குதல், வாள் வீச்சு மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி கோவில்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்கி விளையாட்டு விடுதியும் மற்றும் மாணவி களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி நேரு உள் விளையாட்டரங்கம் சென்னை தடகளம், குத்துச் சண்டை, கையுந்துபந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜுடோ , மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி காட்பாடி வேலூர் கூடைப்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி போன்ற இடங்களில் உள்ளன.
விளையாட்டு போட்டிகள்
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு (1.1.2023) 17 வயது நிரம்பிய பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர் ஆவர்.
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டி களில் விண்ணப்பிப் பவர்கள் மாநில அளவில் குடியரசு தினம், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப் பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளை யாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளை யாட்டுக் கூட்டமைப்பு ( எஸ்.ஜி.எப்.ஐ.) இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கையுந்துபந்து விளையாட்டில் 185 - செ.மீ க்கு மேல் உயரமுள்ள மாணவர்கள் மற்றும் 175 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம்
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப் பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 1.5.2023மாலை 5 மணி வரை ஆகும். ஆன்லைன் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக் கப்படும்.
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் 3.5.2023 அன்று காலை 7 மணியளவில் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் பெண்களுக்கான கபடி மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து, கையுந்துப்பந்து மற்றும் ஆண்களுக்கான வாள்வீச்சு, பெண்களுக்கான கால்பந்து, கைப்பந்து போன்ற விளை யாட்டுகளுக்கு சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 3.5.2023 அன்று காலை 7 மணிக்கும், சென்னை எழும்பூர் எம்.ஆர்.கே. ஆக்கி ஸ்டேடியத்தில் ஆண்கள், பெண்களுக்கான வளைகோல்பந்து தேர்வு போட்டி 3.5.2023 அன்று காலை 7 மணிக்கும் நடைபெற உள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அன்னலெட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
- வேலை செய்பவர்களை துணைத்தலைவர் மிரட்டுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், தென்காசி யூனியனுக்கு உட்பட்ட பாட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அன்னலெட்சுமி, துணைத்தலைவராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் செயல்படாமல் இருந்ததால் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்து வந்தனர்.
அந்த புகார் மனுவில், ஊராட்சியில் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை என்றும், துணைத்தலைவர் ஊராட்சியில் வேலை பார்க்கும் அனைவரையும் வேலை செய்யவிடாமல் தடுப்பதுடன் , வேலை செய்பவர்களை மிரட்டி வருகிறார் எனவும் புகார் கூறியிருந்தனர்.
இந்த புகார்கள் தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பாட்டாக்குறிச்சி ஊராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டார்.
அதில் பாட்டாக்குறிச்சி ஊராட்சியின் தலைவர் அன்னலெட்சுமி, துணைத்தலைவர் முருகேசன் மற்றும் உறுப்பி னர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருப்பதும், தலைவர் மற்றும் துணைத் தலைவர் தங்களது குடும்ப பிரச்சினை காரணமாக ஊராட்சியினை செயல்படாமல் வைத்துள்ள னர் என்பதும் உறுதியானது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தும் அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தினால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன்படி பாட்டாக்குறிச்சி தலைவர் அன்னலெட்சுமி மற்றும் துணைத்தலைவர் முருகேசன் ஆகியோரது காசோலைகள் மற்றும் பி.எப்.எம்.எஸ்.களில் கையொப்பமிடும் அதிகாரத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு வழங்குவதாக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
- 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 5 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தென்காசி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் கீழ் கண்டவாறு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
அதன்படி ஊரகப் பகுதிகளில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 5 உறுப்பினர்களும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேற்கண்டவாறு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் விவரங்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விபரத்தினை சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இன்று தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பரவலாக்கம் திட்டம் தயாரிப்பதற்கு தேவையான மாவட்ட அளவிலான வள ஆதாரங்கள், விபரங்களை சேகரித்தல் மற்றும் நாளைய தேதி வரையிலான விபரங்களை பெறுதல், மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான கொள்ளைகள், திட்டங்கள் தயாரித்தல் மற்றும் முன்னுரிமை அளித்தல், மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரித்த திட்டங்களை ஒருங்கிணைத்து மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரித்தல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) முத்துகுமார், தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், மாவட்ட ஊராட்சி செயலர் ராம்லால், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
- 713 விவசாயிகள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்காசி:
பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் விவசாயம் சார்ந்த மாத வருமானமும், வேலை வாய்ப்பும் தரக்கூடிய ஒரு தொழில் ஆகும். சர்வதேச அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு பட்டுத்தொழில் வளர்ச்சிக்கு குறிப்பாக வெண்பட்டு (பைவோல்டைன்) உற்பத்தியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பட்டுத்தொழில்
தென்காசி மாவட்டம் தென்காசியை தலைமை யிடமாக கொண்டு உதவி இயக்குநர் அலுவலகமும் 4 தொழில்நுட்ப சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் பட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருமானம் உயர்வடைவதற்கு உறுதுணை யாக இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தம் 1658.50 ஏக்கர் பரப்பளவில் 713 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதுடன் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை
அதன்படி கடந்த 2022-2023-ம் ஆண்டில் மாநிலத்திட்டத்தில் நடவு மானியம் 160.00 ஏக்கர் 79 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 16.80 லட்சம், தனிபுழு வளர்ப்பு மனை அமைத்தல் 16 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 19.20 லட்சம் மற்றும் 10.50 மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்கள் 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பகுதி திட்டத்தின்கீழ் நடவு மானியம் 2000 ஏக்கர் 20 பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 7.73 லட்சம், தனிபுழு வளர்ப்பு மனை அமைத்தல் 20 பயனா ளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 61.80 லட்சம், 11.59 லட்சம் மதிப்பில் புழு வளர்ப்பு தளவாடங்கள் 20 பயனாளிகளுக்கும் மற்றும் 0.77 லட்சம் மதிப்பில் கிருமிநாசினிகள் 20 பயனாளி களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்களே தொழில் முனைவர் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் அடைக்கலப்பட்டணம் ஊரை சேர்ந்த ஜேக்கப் என்ற பட்டு விவசாயினை இத்துறை மூலமாக பலமுனை பட்டு நூற்பு ஆலை அமைத்திட மானியம் வழங்கப்பட்டு தரமான பட்டு நூல்கள் உற்பத்தி செய்து கூடுதலான வருமானம் ஈட்டி வருகிறார்.
நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நிஷாந்தி, பட்டு ஆய்வாளர் ஜெயந்தி, தொழில்நுட்ப உதவியாளர் பிரபு, உதவி பட்டு ஆய்வாளர்கள் ஆபேல்ராஜ் மற்றும் பலவேசம்மாள், இளநிலை பட்டு ஆய்வாளர்கள் சைமன் அருள்ஜீவராஜ், சங்கரன் மற்றும் காளிதாஸ் ஆகியோர்களுடன் ராமசுப்பிரமணியன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
- பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு,கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- வாகனத்தில் முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி இ.சி.சங்கரன்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பஸ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்வது போன்று இந்த ஆண்டும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 பள்ளி வாகனங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதுமட்டுமின்றி வாகனத்தில் படிக்கட்டு, அவசர வழி, சி.சி.டி.வி. காமிரா,வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளதா என்றும், முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.
வாகனத்தில் முன்புறமும், பின்புறமும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் ஓட்டுநர் வாகனத்தை இயக்குவதற்கு வசதியாக முன்பும், பின்பும் தெரியும் படி காமிரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார், தீயணைப்பு துறை அலுவலர் மகா லிங்கம், நேர்முக உதவி யாளர் முருகன், கண்கா ணிப்பாளர் சிவன் ஆறுமு கம், உதவியாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2, வட்டார போக்குவரத்து அலுவலகம் மணிபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வேட்பு மனு 2 படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும், உள்ளாட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
- வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வருகிற 23-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
இத்தேர்தலில் ஊரகப்பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர்களில் இருந்து 7 உறுப்பினர்களும், நகர பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிவாளரால் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு 2 படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கங்களி லும், உள்ளாட்சி அலுவல கங்களிலும் கிடைக்கும். வேட்புமனு பரிசீலினையானது 12-ந்தேதி 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பினை வருகிற 14-ந்தேதி அன்று 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். தேர்தலில் வாக்குப்பதிவு இருக்குமானால் 23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடை பெறும்.வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2021 - 2022-ன் கீழ் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சின்ன ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் மற்றும் மூலதன மான்ய திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.298 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு சத்திரம் - வடுகபட்டி (தென்மலை) சாலையில் பாலம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச்செல்வம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணைத்தலைவர் சந்திரமோகன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், மேலநீலித நல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலைமணி, தலையாரி அழகுராஜா, பெரியா ண்டவர், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. துணைச்செ யலாளர் சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூராட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் விக்னேஷ், புளியங்குடி நகர தி.மு.க. செய லாளரும், நகராட்சி துணைத் தலைவரு மான அந்தோணிசாமி, சிவகிரி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அனைத்து பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி, சமுதாய நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வா கிகள் விவசாய தொண்டர் அணி கார்த்திக், விவசாய அணி வீரமணி, தொ.மு.ச. மாடசாமி, தொழில் நுட்ப அணி தங்கராசு உள்பட ஏராள மானோர் கலந்து கொ ண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு நன்றி கூறினார்.
- சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
- விண்ணப்பப்படிவங்களை 26-ந் தேதி அலுவலக நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்குவித்து கவுரவிக்கப்படுத்துவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழா அன்று கீழ் காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
1.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.
2.மாற்றுத்திற னாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.
3.மாற்றுத்திறனாளி களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
5.சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பப்படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதி அன்று அலுவலக நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்,https://awards.tn.gov.in"என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.