என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெப்போ"

    • கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருக்கிறது.
    • ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மேலும் உயர்கிறது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை அறிவித்தார். இதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

    ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 2.25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

    சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருக்கிறது.

    ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மேலும் உயர்கிறது. இந்த வட்டி உயர்வு, கடன் வாங்கியவர்களுக்கு சாதகமில்லை. அதே வேளையில் வட்டி விகித உயர்வால் வங்களில் டெபாசிட் செய்தவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும். பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்கும் நிலையில் ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டியில் சக்தி காந்த தாஸ் மேலும் கூறியதாவது:-

    நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால் இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    நிலையற்ற உலகளாவிய வளர்ச்சிகளுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் மீள் தன்மையுடன் உள்ளது. சில்லரை பணவீக்கம் 4-ம் காலாண்டில் சராசரியாக 5.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2022-23-ம் ஆண்டில் சில்லரை பணவீக்கம் 6.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் 5.3 சதவீதமாக இருக்கும்.

    2023-24-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

    இந்த தருணத்தில் 0.25 சதவீத வட்டி விகித உயர்வு பொருத்தமானதாக கருதப்படுகிறது. பணவியல் கொள்கை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பணவீக்கத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது
    • உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும்

    இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் இல்லையென்றால் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பணத்தை பெறலாம்.

    இதற்காக அவ்வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகளை கொண்டு தீர்மானிக்க படுக்கிறது. இதனை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள்.

    ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த கமிட்டியின் சந்திப்பு ஆகஸ்ட் 8 முதல் 10 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை (Repo rate) எந்த மாற்றமுமில்லாமல் 6.5 சதவீதத்திலேயே வைத்துள்ளது.

    சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவிலேயே வைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

    இதனை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

    விவசாய கடன்களில் உயர்வு வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.

    உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும். ஆனால், உலகளவில் வளர்ச்சி என்பது குறைவதற்கான ஆபத்தும் அதிகம். பணவீக்கத்தின் போக்கை கூர்மையாக கவனித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

    முன்னர் அதிகரித்திருந்த ரெப்போ வட்டி விகிதத்தின் தாக்கம் இப்போது பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா விரைவில் மாறும். உலகின் பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீதம் இந்தியா வழங்குகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த பிப்ரவரியில், அதற்கு முன்பு வரை 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் என உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
    • 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1. ரிசர்வ் வங்கியின் பயணம் இந்தியப் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.

    2. எங்களின் பல பொறுப்புகளை நிறைவேற்றும்போது கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

    3. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

    4. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொள்கை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கான இடத்தை வழங்குகிறது.

    5. உணவுப் பணவீக்க அழுத்தங்கள் பிப்ரவரியில் அதிகரித்தன; பணவீக்கத்தின் தலைகீழ் ஆபத்தில் எம்.பி.சி. விழிப்புடன் உள்ளது.

    6. உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.

    7. கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு2025 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    8. 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

    9. உலகளாவிய வளர்ச்சி மீள்தன்மையுடன் உள்ளது. சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டி நிலை உள்ளது.

    10. தொடரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பொருட்களின் விலைகளில் தலைகீழான அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

    11. அறையில் இருந்த யானை (பணவீக்கம்) நடைபயிற்சிக்கு வெளியே சென்றதுபோல் தெரிகிறது. அது மீண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    12. விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே எங்கள் முயற்சி

    13. வங்கிகள், என்.பி.எஃப்.சி-க்கள், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்வாகத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்

    14. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரச் சந்தையில் சில்லறை வணிக பங்களிப்பை எளிதாக்க மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

    15. இந்தியாவின் அந்நிய செலாவணி இது வரை இல்லாத அளவிற்கு மார்ச் 29-ல் உயர்வு.

    • ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் மாற்றம் இல்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் அறிவிப்பு.
    • 2023-ல் இருந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் தொடர்கிறது.

    இந்திய ரிசர்வ் வங்கி  கவர்னர் சக்திகாந்தி தாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது "ரெப்போ வட்டி சதவீதத்தில் மாற்றம் இல்லை. 6.5 சதவீதமாக தொடரும். நாணயக் கொள்கை கமிட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

    2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனத்திற்கான கடன் வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை.
    • ஜூலை- செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும்.

    இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் நீடிக்கும் என அறிவித்தார். இதன்மூலம் 11-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இதன் காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது. ரிசர்வ் வங்கி மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிதான் ரெப்போ ஆகும்.

    ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும். இது எதிர்பார்த்ததைவிட குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.

    • அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.
    • கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.

    வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

    சக்திகாந்த தாஸுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பரில் பதவியேற்றார். அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.   

    கடைசியாக கடந்த 2020 கோவிட் சமயத்தில் ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகளை, ரிசர்வ் வங்கி குறைத்தது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும். 

    இதற்கிடையே இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்பிஐ ஆளுநர், அடுத்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 4.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2025-26-ம் நிதியாண் டில் 4 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7, 7, 6.5, 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் வருகையின் பின்னணியில் உணவு பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக் கொள்கை சீராக உள்ளது.

    டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சைபர் மோசடிகளைச் சரிபார்க்க வங்கிகளுக்கு பிரத்யேக டொமைன் பெயர் இருக்க வேண்டும். இதன் பதிவு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று கூறினார்.

    ×