என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவஸ்தானம்"

    • குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
    • அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.

    2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

    கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.

    • தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ளது.
    • தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட 88 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.

    இதனை தமிழக முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் வழங்கினார்.

    இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் நிதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 100 நேரடி (ஆப்லைன்) தரிசன ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

    ஆனால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்படாததால், இன்று முதல் விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவாணி தரிசனம் நேரடி(ஆப்லைன்)தரிசன டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் அனுமதி சீட்டு சமர்ப்பித்த பக்தர்களுக்கு தினமும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி வருகிற 19-ந் தேதி கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

    வருகிற 18-ந் தேதி முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×