search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தடிமை ஒழிப்பு தினம்"

    • கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
    • தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணை யர் மணிகண்ட பிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    குமரி மாவட்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதரின் அறிவு ரையின்படி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கல்லூரியில் கொத்த டிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கிராமிய கலைஞர் பழனியாப்பிள்ளை குழுவி னர் கலைநிகழ்ச்சிகள் மூலம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் வடசேரி பஸ் நிலையம், செண்பக ராமன்புதூர், ஆரல்வாய் மொழி அரசு பள்ளி மற்றும் தோவாளை பகுதி களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சி யில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஈவ்லின் சர்மி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப் பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலு மாக தடை செய்யப்பட் டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்த டிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே, தொழிலாளர் களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், துணை தாசில்தார் சிதம்பரம், கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×