search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபைல்"

    • தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    • ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

     இந்தியாவில் பிரபல மொபைல் போன் பிராண்ட் ஆக விளங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது சமீப காலமாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஒன் பிளஸ் 9 மற்றும் ஒன் பிளஸ் 10 ஆகிய பழைய பிளாக்ஷிப் வேரியண்ட்களை பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

     

    இதனால் போன்கள் திடீரென எந்த இயக்கமும் ரெஸ்பான்ஸும் இல்லாமல் திரை கருப்பாக மாறி விடுவதாக கூறியுள்ளனர். போன் லேக் ஆவதும் அதிக சூடாவதுமாக இருக்கிறது என்றும் பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை அடுக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்திய சாப்வேர் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நடக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது

    இந்த நிலையில்தான், பழுதுபட்ட தங்களது ஒன் பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைல் போன்களை சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் ரூ. 42,000 வரை கேட்பதாக பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தொகை அந்த மொபைல்களின் விலையை விட அதிகம் ஆகும்.

    இந்த மாடல்களை விட மேம்பட்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பழைய மாடல் போன்களின் ரிப்பேர் செலவுக்கே 42,000 ஆயிரம் ருபாய் ஆகும் என்று சர்வீஸ் சென்டர்கள் கூறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
    • மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.

    இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.

    இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

     

    அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

     

    மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை

    ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் எடுக்க, கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக டிக்கெட் எடுக்கலாம். மேலும் சீசன்- பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பிக்கவும் இயலும்.

    அதாவது ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 20 கி.மீ. தொலைவு வரை வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போனில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்கும் முறையில் காகிதம் இல்லாத- காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் உள்ளன. அதன்படி சுற்றுச்சூழலுக்கு

    காகிதம் இல்லாத பயணச் சீட்டு எடுக்க முடியும். மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை எடுக்கலாம். அதனை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். இது காகிதம் இல்லாத முறை ஆகும்.

    அடுத்தபடியாக காகிதத்துடன் கூடிய முறை. இதன்படி பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி டிக்கெட் பதிவு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு எந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறு சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருப்பது போல க்யூஆர் கோட், பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரெயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

    காகிதம் இல்லாத முறையில் டிக்கெட் எடுக்கும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் உரிய அபராதம் விதிக்கப்படும். தென்னக ரெயில்வேயில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 2.51 கோடி பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து உள்ளனர்.

    தென்னக ரெயில்வேயில் மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    ×