என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரிமீயர் லீக்"

    • மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் டெல்லியை வீழ்த்திய மும்பை 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், கோப்பை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது:

    நாங்கள் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தோம். அது எங்களுக்கு உதவியது. 150 (149) என்பது ஒரு நல்ல ஸ்கோர் அல்ல, ஆனால் அது போன்ற போட்டிகளில் அழுத்தமான ஆட்டங்களில், அது எப்போதும் 180 ரன்கள்தான். மேலும் எங்கள் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பெருமை.

    பவர்பிளேயில் எங்களுக்கு திருப்புமுனைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தது. இஸ்மாயில் மற்றும் சீவர் பிரண்ட் எங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

    இன்று அணியில் அனைவரும் பந்து வீசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் விஷயங்களை மிகவும் தெளிவுபடுத்தினோம், அவர்களின் பாத்திரங்களை தெளிவுபடுத்த ஒருவருக்கொருவர் சந்திப்புகளை நடத்தினோம்.

    வெற்றிக்கான திறவுகோல் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், சரியான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதும் ஆகும். நாங்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்பினோம், ஒரு அணியாக, நாங்கள் அதைச் செய்தோம்.

    நான் பேட் செய்ய உள்ளே சென்றபோது அது எளிதானது அல்ல. நான் அங்கேயே இருந்து ஸ்ட்ரைக் செய்துகொண்டே இருந்தால் நாட் சீவர் பிரண்ட் அங்கே இருந்தால் நான் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை ஆதரிக்க விரும்பினேன் என தெரிவித்தார்.

    • ஆட்ட நாயகி விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வென்றார்.
    • 523 ரன்கள் எடுத்த நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

    இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த மும்பை அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மேலும், நாட் சிவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 149 ரன்கள் எடுத்தது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    மரிசான் காப் கடைசி வரை போராடினார். அவர் 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.

    • ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.

    இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் முடிவில் மும்பை, குஜராத், டெல்லி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
    • நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் என இருவரும் அரை சதம் கடந்தனர்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்து 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 பந்தில் 36 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேனில் கிப்சன் 34 ரன்னும், லிட்ச்பீல்டு 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • நாட் ஸ்கைவர், மேத்யூஸ் ஆகியோர் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • கேப்டன் கவுர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதி டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி மும்பை அணி தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். பாட்டியா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட், மேத்யூஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.

    இருவரும் குஜராத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் களம் புகுந்த கேப்டன் கவுர் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது.

    • மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது.
    • இதில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை மந்தனா ரூ.3.4 கோடிக்கு விலை போனார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26- ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் களம் இறங்குகின்றன.

    இந்த அணிகளுக்கு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் நேற்று பிற்பகல் நடந்தது. 5 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது. ஏலப்பட்டியலில் 179 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 449 வீராங்கனைகள் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார்.

    முதல் வீராங்கனையாக இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

    இந்திய அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை அணி சொந்தமாக்கியது.

    ஜெமிமா ரோட்ரிக்சை ரூ.2.2 கோடி மற்றும் ஷபாலி வர்மாவை ரூ.2 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கியது.

    ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடிக்கு உ.பி. வாரியர்ஸ் வாங்கியது.

    வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

    மிடில் வரிசை பேட்டர் யாஸ்திகா பாட்டியா ரூ.1½ கோடிக்கு மும்பை வாங்கியது.

    இளம் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு வாங்கியது.

    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை ரூ.1½ கோடிக்கு பெங்களூரு அணி உரிமையாக்கியது.

    தேவிகா வைத்யாவை ரூ.1.4 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணி வாங்கியது.

    மேலும், வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நதாலி சிவெரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும் தட்டிச் சென்றது.

    • முதல் ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-ஹர் மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மொத்தம் 24 ஆட்டங்கள் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானம், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய் பட்டேல் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடக்கிறது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை போன்று பெண்களுக்கு பிரிமீயர் லீக் ஆட்டத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்தது.

    அதன்படி முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 24 ஆட்டங்கள் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானம், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய் பட்டேல் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடக்கிறது. தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது.

    டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும். முதல் ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-ஹர் மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மெக்லானிங்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மந்தனாவும், உ.பி. வாரியர்சுக்கு அலிசா ஹீலியும் கேப்டனாக உள்ளனர்.

    • தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    • போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

    இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

    ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. டாஸ் இரவு 7.30 மணிக்கு போட்டப்படும். இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும். தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இப்போதைக்கு இந்த போட்டியை காண பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • நேற்றைய ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.
    • இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய டெல்லி-பெங்களூரு இடையிலான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் இடுப்பு உயரம் அளவுக்கு வீசிய பந்துக்கு டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.

    ரீப்ளேவுக்கு பிறகு அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.

    20 ஓவர் வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.
    • ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரி மீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித் தொடரில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    மும்பை 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியாகெர், நடாலி ஸ்கிவர்-பிரன்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.பந்து வீச்சில் சைகா இஷாக், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உள்ளனர். மும்பை அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலம் வாய்ந்ததாக உள்ளது.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. அந்தஅணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் சோபியா டிவன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஹீதர் நைட், மேகன்ஷட், ரேணுகா சிங் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி 223 ரன்கள் குவித்தது. இதனால் பெங்களூரு அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

    நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை டெல்லி வீழ்த்தியது. இரவு நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை உ.பி.வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியா சத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றது. டெல்லி, உ.பி.வாரியர்ஸ் அணிகள் தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    ×