என் மலர்
நீங்கள் தேடியது "பத்ரிநாத் கோவில்"
- பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.
- சாமியார் ஒருவர் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார்.
டோராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.
தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. கோவிலுக்கு செல்வதற்கான சாலைகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஆனாலும் அங்குள்ள சாமியார் ஒருவர் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார். இது அங்கு சென்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனை யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது.
- கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவில் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறந்து இருக்கும். இன்று காலை 7.10 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்காக கடந்த சனிக்கிழமை பக்தர்கள் யாத்திரை தொடங்கியது. கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
- இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று.
- கோவிலுக்குள் நுழையும் முன்பாக, சுடுநீரில் நீராடுவது வழக்கம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத். இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாக போற்றப்படுகிறது. இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

`சார் தாம்' என்று அழைக்கப்படும் இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் இந்த பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று. பத்ரிநாத் கோவிலின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. அங்குள்ள வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள்.
இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது. பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன்பாக, இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம்.

பத்ரிநாத் கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே மகாவிஷ்ணு வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்த ஆலயம். ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறந்து வைக்கப்படும்.
- இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று.
- சார் தாம் யாத்திரையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
புதுடெல்லி:
இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் சார் தாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோவில்களுக்கு செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக் நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத். இந்தியாவின் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்குள்ள சுவாரசியமான அம்சங்களில் ஒன்று வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள். இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது.
பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன் இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம். பத்ரிநாத் கோவில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்த ஆலயம். ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே திறந்து வைக்கப்படும்
இந்நிலையில், இந்த ஆண்டு மே 4-ம் தேதி காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த பஞ்சமியை முன்னிட்டு நரேந்திர நகர் அரண்மனையில் இன்று நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் தேதி மற்றும் நேரம் முடிவு செய்யப்பட்டது.
சார் தாம் யாத்திரையின்போது நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.