search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளிமலை"

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது.
    • ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இங்கு கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1500 வாக்குகள் பதிவானது.

    வெள்ளிமலை பகுதியில் வெளியூர் பகுதி மக்கள் குடும்பத்துடன் தங்கி வந்த நிலையில் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வேறு நபருக்கு கைமாற்றி விட்டது போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. இதனால் அங்கு தங்கி இருந்த தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

    இதனால் வெள்ளிமலையில் வசிக்கும் குடும்பத்தினர் குறைந்து தற்போது 2 குடும்பத்தினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அதில் 2 பெண்கள், 4 ஆண்களுக்காக அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது. அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் 12 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை ஓட்டு ஜாவிதாவில் 6 பேர் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவர்களுக்காக அங்கு வாக்குச்சாவடி மையம், தேர்தல் அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த கிராமத்தில் தொழிலாளர்கள் இல்லாத நிலை ஒரு பக்கம் இருப்பதால் வெளி மாநில தொழிலாளர்கள் அவ்வப்போது தேவைக்கு வந்து தங்கி விட்டு பின்னர் சென்று விடுவது வழக்கம்.

    மேலும் இந்த கிரமத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.
    • 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மகராஜ் மண்டைக்காடு கோவிலில் நடைபெறுகின்ற சமய சொற்பொழி தொடர் பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருக்கு எனது கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். 1982-ம் ஆண்டு மண்டைக் காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல. அது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதத் தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் குடமுழுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிக நிதியை தமிழக முதல்வர் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இந்து சேவா சங்கம் என்ற பெயரில் அறநிலை யத்துறை கோவில்க ளில் உள்ள கட்டிடங் களை கையகப்படுத்தி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து சேவா சங்கம் நடத் தியது என கூறி வந்தனர். புகாரின் பேரில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிகளை அறநிலையத்துறை நடத்தும் என அறிவித்துள்ளார்.

    மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் சமய மாநாட்டில் உள்ள போஸ்டரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பெயரை போட்டுள்ளனர். இதனால் இந்து சமய மாநாடா? அரசியல் மாநாடா? என்று தெரிந்து கொள்ள வேண் டும். மார்ச் 5-ந் தேதி மாசி கொடைவிழா சிறப்பாக நடக்கும்.

    நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடக்கும். 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். உங்கள் பேச்சை குறைத் துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×