என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவர்கள் நியமனம்"
- தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
- பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.
இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றாச்சாட்டு இருந்தது.
- மருத்துவ பணி தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, பிப்.21-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றாச்சாட்டு இருந்தது.
எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ பணி மேற்கொள்ள கடந்த 16-ந் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, டாக்டர்கள் ராஜலட்சுமி ஆகியோர் வாரத்திற்கு 2 நாட்கள், ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்று, காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பணி தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆயுத படை காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.