என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் மோகன்லால்"
- பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார்.
- துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்.
துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தை தமிழில் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த திரைப்படமாக துடரும் உருமாறியுள்ளது. திரைப்படம் இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து மோகன்லால் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'
- திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகத்தையும் நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி மலையாளம்,தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழு ஒரு சுவாராசிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் முதல் நாள் முதற்காட்சி அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் முதல் பாகமான லூசிஃபர் படத்தை வரும் மார்ச் 20 ஆம் தேதி ரீரிலீஸ் செய்யவுள்ளனர்.
படத்தை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது.
- பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால்.
நடிகர் மோகன்லாலுக்கு சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மோகன்லாலிடம் யானை தந்தம் வைத்திருக்க உரிய லைசன்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கொச்சி பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் 2 பேர் பெரும்பாவூர் கோர்ட்டில் மனு செய்தனர். அதில் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ்பெற கூடாது என்று கூறியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற மறுத்து அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பெரும்பாவூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரிய மனுவை விசாரித்து 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாவூர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.
- பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி தேவாரத்தில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 யானை தந்தங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு வனத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மட்டுமின்றி, மேலும் 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் மோகன்லால் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.
மேலும் யானை தந்தங்களை வைத்துக் கொள்ள மோகன்லாலுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர், நடிகர் மோன்லாலுக்கு யானை தந்தங்கள் உரிமை சான்று வழங்கிய முதன்மை தலைமை பாதுகாவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகுமார் என்பவரிடம் யானை தந்தத்தை வாங்கியதாகவும், தந்தம் செட் வைத்திருப்பதற்கான சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும் கோர்ட்டில் நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த பிரச்சினையை பொதுநலனாக கருதிய ஐகோர்ட்டு, வழக்கை தொடர மாஜிஸ்திரேட்டு கோட்டுக்கு பரிந்துரைத்தது. அதன்படி பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
நடிகர் மோகன்லால் மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் நவம்பர் 3-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்டடு உத்தரவிட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் மோகன்லால் வந்திருந்தார்.
- அதிக வேலை இருந்ததால் மூதாட்டியை மோகன்லால் சந்திக்கவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா. 108 வயது மூதாட்டியான இவர் அங்குள்ள முதியவர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
மூதாட்டி மாதவியம்மா நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால் நடித்த திரைப்படம் டி.வி.யில் ஒளிபரப்பினால் ஒரு நிமிடம் கூட விடாமல் ரசித்து பார்ப்பாராம். அந்த அளவுக்கு மோகன்லால் ரசிகையாக இருந்து இருக்கிறார்.
மேலும் நடிகர் மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது. அதனை கடந்த 2017-ம் ஆண்டு மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாபி பரம்பி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார்.
அதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதன் மூலம் மூதாட்டி மாதவியம்மா வெளி உலகத்திற்கு தெரிய வந்தார். மேலும் அனைத்து சமூக வலைதளங்களிலும் இடம் பிடித்தார். இதனால் அவரை நடிகர் மோகன்லால் நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் மோகன்லால் வந்திருந்தார். அப்போது அவர் மூதாட்டி மாதவியம்மாவை நேரில் சந்திப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதிக வேலை இருந்ததால் மூதாட்டியை மோகன்லால் சந்திக்கவில்லை. உடல் உபாதை காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு மூதாட்டியை அழைத்து செல்ல முடியவில்லை. இந்த நிலையில் மூதாட்டி மாதவியம்மா வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார்.
நடிகர் மோகன்லாலை சந்திக்கும் அவரது கனவு கடைசி வரை நனவாகாமல் சென்று விட்டது. டி.வி.யில் மோகன்லால் படம் ஓடினால் ஒரு நிமிடம் கூட மாற்ற மாட்டார் என்றும், யாரொனும் சேனலை மாற்றினால் அவருக்கு கோபம் வருமென மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தை சேர்ந்த ரசியா பானு தெரிவித்தார்.
- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம்.
- மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் திரிஷ்யம் 3 திரைப்படத்தை குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
- பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஜதின் ராம்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம்.
- 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷ்யம் 3 படத்தை குறித்து மோகன்லால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுக் குறித்த அவர் பகிர்ந்த புகைப்படத்தில் அவர் ஜீத்து ஜோசப் இடம் பெற்றுள்ளனர். புகைப்படத்திற்கு கடந்தகாலம் எப்பொழுதும் அமைதியாக இருக்காது என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேரை பரிந்துரை செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
- உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகப்படுத்த இந்த 10 பேரை பரிந்துரைத்து உள்ளேன்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பேசும்போது, "உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் வலுவான குரலை எழுப்பும் வகையில், உணவில் எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துமாறும், எண்ணெய் உட்கொள்ளலை 10 சதவீதம் குறைப்பதன் சவாலை 10 பேருக்குக் கடத்துமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் நடிகர்கள் மோகன்லால், மாதவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேரை பரிந்துரை செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
"உடல்பருமனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் நான் இந்த 10 பேரை பரிந்துரைத்து உள்ளேன். இவர்களின் பங்களிப்பால், உடல்பருமனுக்கு எதிரான இயக்கம் விரிவடையும்" என்று மோடி எக்ஸ் வலைத்தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
போஜ்புரி பாடகர்-நடிகர் நிராஹுவா, துப்பாக்கிச் சூடு சாம்பியன் மனு பாக்கர், பளுதூக்கும் வீரர் மீராபாய் சானு, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் எம்.பி. சுதா மூர்த்தி ஆகியோர் மோடியால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற நபர்கள் ஆவர்.
- மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

மான்ஸ்டர்
மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மான்ஸ்டர்
வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மான்ஸ்டர்
அதாவது, படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் படக்குழு சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் தணிக்கை குழு கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
- மான்ஸ்டர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

மான்ஸ்டர்
இந்நிலையில் மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மான்ஸ்டர்
வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் உடனடியாக இந்த பணிகளை முடிப்பது சிரமம் என்பதால் மான்ஸ்டர் இந்தியாவில் வெளியாகும் அதேநாளில் வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.
