என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    • ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்நிலையில், முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அதன்படி ஐதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
    • ஒரு போட்டியிலாவது 300 ரன்னைத் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

    ஐபிஎல் 2025 சீசனில் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதல் போட்டியில் 280 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோவிற்கு எதிராக 200 ரன்களை தொடமுடியவில்லை. லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொத்தம் 4 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில் நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள தயார். அவர்களுக்கு எதிராக சிறப்பு திட்டம் வைத்துள்ளோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் இளம் வீரர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விப்ராஜ் நிகம் கூறுகையில் "சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறந்த அணி என்பது உண்மைதான். சிறந்த பேட்டிங் ஆர்டர் வைத்துள்ளனர். பந்து வீச்சு கண்ணோட்டத்தில் எங்களுடைய அணி ஆலோசனைகள், பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் போட்டியின்போது வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆகவே, நாளைய போட்டிக்கு அதுபோன்ற சில சிறந்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வரும் போட்டிகளில் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போட்டியிலேயே விப்ராஜ் நிகம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். மார்கிராம் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி 210 இலக்கை எட்டி லக்னோவிற்கு எதிராக வெற்றி பெற காரணமாக இருந்தார். அஷுடோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 7 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விப்ராஜ் நிகம்- அஷுடோஷ் சர்மா ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது.

    • இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது.
    • தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன்.

    மும்பை :

    ஐபிஎல் 2025 -ம் ஆண்டு சீசன் தொடரில் டு பிளிஸ்சிஸ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதியை மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விதி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை தருவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    இது குறித்து டெல்லி அணியின் துணை கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-

    டெல்லி லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் அற்புதமான போட்டியாக அமைந்தது. பல கிரிக்கெட் வீரர்கள் பல ரசிகர்கள் ஐபிஎல் இருக்கும் புதிய விதி குறித்து புகார் அளிக்கிறார்கள். ஆனால் இந்த போட்டியை பார்த்த பிறகு புதிய விதி ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    ஐந்து விக்கெட்டுகள் விழுந்தவுடன் போட்டி அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் புதிய வீரர் ஒருவர் வந்து ஆட்டத்தை மாற்றிவிட்டார். நானாக இருந்தால் மசாலா டீ அருந்தி இதுபோல் இருக்கும் போட்டியை ரசித்துப் பார்ப்பேன்.

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஆடுகளத்தை பார்த்தேன். பந்து கொஞ்சம் நிதானமாக தான் பேட்டிற்கு வந்தது. ஐந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பிறகு இந்த இலக்கை எட்டுவது முடியாத காரியம் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய பழைய மூளை போட்டி முடியும் வரை லீக் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பை விட்டு விலக மாட்டாய் என்று கூறியது. மேலும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வரும்போது அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    தற்போது இந்திய அணியில் பல வீரர்கள் அபாரமாக விளையாடுகிறார்கள். குறிப்பாக இந்த இரண்டு வீரர்களும் பந்தை வெகு தூரத்திற்கு அடித்தார்கள். இந்த போட்டியை பார்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது.

    மோகித் சர்மா அடித்ததிலேயே மிகவும் முக்கியமான ரன்னாக அவருடைய வாழ்க்கையில் இதுவாகத்தான் இருக்கும். மூத்த வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் பல கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. ஐபிஎல் பாணியே இதுதான். நான் ஒரு அணியில் நீண்ட காலம் தங்கி இருப்பேன். அதன் பிறகு ஏலம் நடக்கும் மீண்டும் புதிய அணிக்கு சென்று புதிய அத்தியாயத்தை தொடங்குது.

    சிஎஸ்கே அணியில் இருந்து ஆர்சிபிக்கு சென்றது ஒரு நல்ல அத்தியாயம் தான். ஆனால் தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன். இன்னும் எவ்வளவு பக்கங்கள் இருக்கிறது என்பது புதிய அணியை பொறுத்துதான் இருக்கிறது.

    என்று டுபிளிசிஸ் கூறியுள்ளார்.

    • கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன்.
    • என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன்.

    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது.

    அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விப்ராஜ் நிகம்- அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக கடைசி வரை அசுதோஷ் சர்மா வெற்றிக்காக போராடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த பரபரப்பான போட்டியில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அசுதோஷ் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன். மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்சர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

    எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இருந்தது. என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது என கூறினார்.

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

     இறுதியில் லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 210 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் மெக்கர்க் 1 ரன்களும், சமீர் ரிஸ்வி 4 ரன்களும், அக்சர் படேல் 22 ரன்களும், டு பிளெசிஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களில் வெறியேறினார். அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

    இறுதியில் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    • மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
    • நிகோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லக்னோவின் ஸ்கோர் 4.4 ஓவரில் 46 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.

    மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் 24 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியால் லக்னோ 12.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது. பண்ட் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 14.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் லக்னோவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரில் லக்னோவின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் லக்னோ 10 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்தது. லக்னோ 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    20வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்கு தூக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    • அக்சர் படேல் தலைமையில் டெல்லி அணி முதன்முறையாக களம் இறங்குகிறது.
    • லக்னோ அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் இடம் பெறவில்லை.

    ஐபிஎல் 2025 சீசனின் 4-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.

    இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி அணியில் கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதனால் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ அணி விவரம்:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:-

    மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், டெல்லி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    விசாகப்பட்டினம்:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

    கடந்த சீசனில் 6-வது இடம் பெற்ற டெல்லி அணி புதிய கேப்டன் அக்ஷர் பட்டேல் தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடிவரும், முந்தைய சீசனில் கேப்டனாக இருந்தவருமான ரிஷப் பண்ட் வெளியேறியதால் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் கேப்டன் அவதாரம் எடுத்துள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் அணியில் புதிதாக ஐக்கியமாகி இருக்கிறார்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், பாப் டுபிளிஸ்சிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மெக்குர்க், அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், குல்தீப் யாதவும், ஆல்-ரவுண்டராக அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள்.

    லக்னோ அணியால் அதிகபட்ச தொகையாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியை வழிநடத்துகிறார். அந்த அணியில் பேட்டிங்கில் ரிஷப் பண்ட், மார்க்ரம், டேவிட் மில்லர், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஷமார் ஜோசப், ரவி பிஷ்னோய், ராஜ்வர்தர் ஹங்கர்கேகர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    காயம் காரணமாக அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனம் கண்டுள்ளது வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. காயத்தால் அவதிப்பட்டு வந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் போட்டி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது வருகை அணிக்கு பலம் சேர்க்கும்.

    புதிய கேப்டன்களுடன் களம் காணும் இரு அணிகளும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், டெல்லி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

    • கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுழற்பந்து வீச்சில் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.

    ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலையில் அக்ஷர் படேலை கேப்டனாக நியமித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனை எதிர்கொள்கிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், பாஃப் டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரைரா, அபிஷேக் பொரேல், திரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    ஆல்-ரவுண்டர்கள்

    அக்சார் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி.

    பந்து வீச்சாளர்கள்

    மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், மெக்கர்க், டூ பிளிஸ்சிஸ், ஸ்டப்ஸ் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் மெக்கர்க், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. டு பிளிஸ்சிஸ் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இருவரும் வெளிநாட்டு வீரர்கள் ஒருவேளை இந்த ஜோடி சிறப்பாக விளையாட வில்லை என்றால் ஸ்டப்ஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டர் வரிசையில் கே.எல். ராகுல், பொரேல், கருண் நாயர், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஸ் சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி அனுபவம் இல்லாத வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் கருண் நாயர், கே.எல். ராகுல் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று விக்கெட்டுகள் மளமளவென இழந்துவிட்டால் அணி சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சு

    மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா ஆகிய ஐந்து முன்னணி வீரர்களை கொண்டுள்ளது.

    ஸ்டார்க், மோகித் சர்மா, டி. நடராஜன், முகேஷ் குமார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடும் லெவனில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா அல்லது முகேஷ் குமார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    ஒருவேளை ஸ்டார்க் விளையாட முடியவில்லை என்றால் சமீரா களம் இறங்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கலாம்.

    சுழற்பந்து வீச்சு

    அக்ஷர் படேல், குல்தீப் என இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பி களம் இறங்க வேண்டிய நிலை.

    வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சில் சமநிலை பெற்ற நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் எப்படி செயல்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை களமிறங்கிய உள்ளார்.
    • மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்கத்தில் சில போட்டிகளை ராகுல் தவறவிடுகிறார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.

    இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பதவியை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு வீரராக அணிக்கு பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்க போட்டிகளை தவறவிடுகிறார். இதனையடுத்து அக்ஷர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கேல் ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்-க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடுவரிசையை சமாளிக்க கேஎல் ராகுல் அந்த வரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை இந்திய அணிக்காக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
    • கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்த தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் எந்த மாற்றமும் இல்லை. மீதியுள்ள கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், ஷ்ரேயாஸ், டெல்லி ஆகிய 5 அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாட உள்ளனர்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் மாற்றம் இல்லை.

    மற்ற 5 அணிகளில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி அணிக்கு அக்ஷர் படேலும் புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    9 அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14-ந் தேதி தான் கேப்டனை அறிவித்தது. டெல்லி அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது.

    இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதனால் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அறிவித்தது. துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளெசிஸ் டெல்லி அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.

    இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ×