search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக ரிஷப் பண்ட் உள்ளார்.
    • சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனத் தகவல்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும், அதிக ரன்கள் அடித்தவராகவும் ரிஷப் பண்ட் உள்ளார்.

    2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டைரக்டர் சவுரவ் கங்குலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக உள்ளார். இருந்த போதிலும் டெல்லி அணி இதற்கு தயாராகி வருகிறது.

    ஒருவேளை டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ விடுவித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மெகா ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சிஎஸ்கே அணியில் இருந்து எம்.எஸ். டோனி ஓய்வு பெற இருக்கிறார். இதனால் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி அடுத்ததாக தயார் செய்ய வேண்டும். இதனால் ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ஏழு சீசனில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • கடந்த மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தலைசிறந்த பேட்ஸ்மேனான இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த ஏழு சீசனில் இவரது தலைமையில் டெல்லி அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் ரிக்கி பாண்டியை பிரிவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • லக்னோ, மும்பை, பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பெங்களூரு, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 6, 7-வது இடங்களில் உள்ளன.

    குஜராத், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.

    • டெல்லி அணிக்கு எதிராக லக்னோ தோல்வியை தழுவியது.
    • இதனால் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    3 மற்றும் 4-வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.

    • கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி அபிஷேக் போரெல் மற்றும் ஸ்டப்ஸ் அதிரடியால் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 5, ஸ்டோய்னிஸ் 5, ஹூடா 0, டி காக் 12, பதோனி 6 என சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    அந்த நிலையில் பூரன் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பூரன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 27 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து குர்ணால் பாண்ட்யா 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து அர்ஷத் கான் மற்றும் யுத்வீர் சிங் சரக் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். யுத்வீர் சிங் சரக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணியின் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    டெல்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் பட்டேல் முறையே 57 மற்றும் 14 ரன்களை சேர்த்தனர். போட்டி முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது.
    • லக்னோ அணி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    லீக் சுற்றில் இன்று தனது கடைசி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுகிறது. அந்த வகையில், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி அணி களமிறங்குகிறது. லக்னோ அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை குவித்தார்.
    • பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.

    டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    188 ரன்களை இலக்காக துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மெக்கர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்களில் அவுட் ஆக ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்களை அடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் ரஷிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    19.1 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளையும் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
    • தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

    இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.

    • சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.
    • கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது.
    • இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்கிறது.

    இந்நிலையில் டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2 முறை மெதுவாக பந்து வீசியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த இந்நிலையில் 3-வது முறையாக இந்த போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

    ×