என் மலர்
நீங்கள் தேடியது "முகமூடி கும்பல்"
- கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
- முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது .
கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அருகில் இருந்த2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடு படும் இடங்களில் முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதிய வர்கள் இதன் காரண மாக பதற்றத்துடன் காணப்படு கின்றனர். போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்கைள பிடித்து ேமலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் உள்ளதாக புகார்
- பொதுமக்கள் மனு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பதியின் தாயார் ஜானகி அம்மாள் (வயது 73).
இவர் புதுக்கோட்டை ராஜாஜி கவுண்டர் நகர் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு முகமூடி கொள்ளையர்கள் இவரது வீட்டில் புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
இந்த நிலையில் திருப்பதி தனது ஊர் பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியதாவது;-
தனது தாயாரை தாக்கி கம்மல் மற்றும் பீரோவில் இருந்த ரொக்கம், கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் எனது குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் உள்ளனர் எனவே உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.