search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3வது டெஸ்ட் போட்டி"

    • 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.

    ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

    இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.

    இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவின் அனல் பறந்த பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
    • இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும் உமேஷ் யாதவ், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சுப்மன் கில் 21 ரன்னிலும், விராட் கோலி 22 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆஸ்திரேலிய அணியின் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், மோர்பி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். லபுசாக்னே 31 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து, 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் நடைபெற்றது. சிறிது நேரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவின் அனல் பறந்த பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும் உமேஷ் யாதவ், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
    • உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

    நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். முதல் ஓவரை மிட்டெல் ஸ்டார்க் வீசினார். இதில் முதல் பந்தில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை.

    அதன்பின் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிய வந்தது. ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் பவுண்டரிகளை அடித்தனர். ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார்.

    அடுத்த புஜாரா களம் வந்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான சுப்மன்கில் 21 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத் தார். அடுத்து புஜாராவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா ஒரு ரன்னிலும், அடுத்து களம் ஜடேஜா 4 ரன்னிலும், நாதன் லயன் பந்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் குனேமேன் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    இந்தியா 45 ரன்னுக்கு 5 விக்கெட்டை (11.2 ஓவர்) இழந்து திணறியது. 10 மணி நிலவரப்படி இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிதானமாக ஆடி களத்தில் இருந்த விராட் கோலி 22 ரன்னிலும், பரத் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

    இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

    • ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
    • தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

    நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல்- வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன்கில், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

    லோகேஷ் ராகுல் ரன் குவிக்க திணறியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கிடையே 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டு சுப்மன்கில் இடம் பெற்றார்.

    ஆஸ்திரேலியா அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் கம்மின்ஸ், வார்னர் ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இடம் பெற்றனர்.

    கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் ஏற்றார்.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன்கில், புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எஸ்.பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

    ஆஸ்திரேலியா- ஸ்டீவன் சுமித் (கேப்டன்), கவாஜா, டிராவிஸ் ஹெட், லபுஸ்சேன், ஹேண்ட்ஸ் கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஸ்டார்க், நாதன் லயன், டாட் மர்பி, மேத்யூ குனேமேன்

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். முதல் ஓவரை மிட்டெல் ஸ்டார்க் வீசினார். இதில் முதல் பந்தில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை.

    அதன்பின் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிய வந்தது. ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் பவுண்டரிகளை அடித்தனர். ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார்.

    அடுத்த புஜாரா களம் வந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன்கில் 21 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத் தார். அடுத்து புஜாராவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

    புஜாரா ஒரு ரன்னிலும், அடுத்து களம் ஜடேஜா 4 ரன்னிலும், நாதன் லயன் பந்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் குனேமேன் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்தியா 45 ரன்னுக்கு 5 விக்கெட்டை (11.2 ஓவர்) இழந்து திணறியது.

    10 மணி நிலவரப்படி இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிதானமாக ஆடி களத்தில் இருந்த விராட் கோலி 22 ரன்னிலும், பரத் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அக்சார் பட்டேல் 6 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    ×