என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தற்கொலைக்கு முயற்சி"
- தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.
- போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (38), இவரது மனைவி மகாலட்சுமி (33), இவர்களுக்கு குருமூர்த்தி(16), குருபிரசாந்த் (15) என்ற இரு மகன்களும், மற்றும் ரிஷபஸ்ரீ (13) என்ற ஒரு மகளும் உள்ளனர். பூபதி தனது சொந்த கிராமத்தி லேயே சொந்தமாக டைலர் கடை வைத்து வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பூபதி தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டமடைந்ததால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சுமார் ரூ.25 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் மற்றும் சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் தங்களுக்கு சொந்தமான காலி இடத்தை விற்று பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ண மூர்த்தி மறுப்பு தெரி வித்துள்ளார்.
இந்நி லையில் மனமுடைந்த பூபதி தனது மனைவி, மகன்கள் மற்றும் மகளையும் சேர்த்து அழைத்து கொண்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செல்லன ஹள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை யோரம் உள்ள மாந்தோப்பில் குடும்பத்துடன் அமர்ந்து பூச்சி மருந்து குடித்து உள்ளனர்.
பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை கண்டு காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மயங்கிய நிலையில் இருந்த 5 பேரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி செல்லும் வழியில் ஒரு பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் எரியோடு போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.
போலீசார் சம்பவ இட த்துக்கு சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்த கீர்த்தி கர்ணன் (33). டிரை வர் வேலை பார்த்து வரு கிறார். இவருக்கு திருமண மாகி மகாலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
தனது குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மகா லெட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்று வந்து ள்ளார். இந்த நிலையில் கீர்த்தி கர்ணனுக்கும் அவ ரது உறவினரான சற்குணம் மனைவி பானுப்பிரியா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாள டைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் மகாலெட்சுமிக்கு தெரிய வரவே அவர் இருவரையும் கண்டித்தார். ஆனால் இவர்களின் தொடர்பு நீடித்து வந்ததால் தன்னை விவாகரத்து செய்து விட்டு பானுப்பிரியாவுடன் சேர்ந்து வாழுமாறும், அதற்கு தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் வேதனையடைந்த கீர்த்தி கர்ணன் மற்றும் பானுப்பிரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
- அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
- நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.
எடப்பாடி:
எடப்பாடி நகராட்சி 24-வது வார்டுக்கு உப்பட்ட, ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில், சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் சித்ரா (37), பெருமாயி (57), பத்மா (23), அமுதா (33) ஆகிய 4 பெண்கள் திடீரென தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆவேசமாக அப்பகுதியில் ஓடி வந்தனர். இதனால், அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது.
சமாதான பேச்சுவார்த்தை
இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதுடன், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த எடப்பாடி தாசில்தார் லெனின் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்