என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலினம்"

    • திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நீதித்துறை, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுகந்தி வரவேற்று பேசினார். கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தலைமை தாங்கிபேசினார். அப்போது அவர் பேசியதாவது:- "ஒரு இனத்திற்கான உரிமை மறுக்கப்படும்போது அதனை பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு மீண்டும் உரிமைகள் மீட்கப்பட்டு வரும் காலங்களிலும் அவ்வுரிமைகள் தொடர வேண்டும் என்பதை நமக்கு நினைவு கூறுவதே உலக மகளிர் தின கொண்டாடப்படும் வரலாறு. ஒரு பெண்ணின் விடாமுயற்சியும் தைரியமும் அவர் உழைப்பினால் பெரும் வெற்றியும் அதன் பின்னர் வரும் காலங்களில் அந்த துறை சார்ந்தபெண்கள் சிறந்து விளங்குவதற்கு முதல் வித்தாகும். இனி வரும் காலங்களில் பாலின சமத்துவத்தை முன்னெடுத்து வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ சமுதாயத்தை தருவோம் என்று இந்த நன்னாளிலே நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டுகிறேன் என்றார்.

    விழாவில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீ குமார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பழனிசாமி, சிவப்பிரகாசம், ராஜேந்திரன் மற்றும் நிறங்கள் அமைப்பின் நிறுவனர் சங்கரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா நன்றியுரை வழங்கினார்.

    மேலும் இந்நிகழ்வில் மகளிர் தினத்தை முன்னிட்டு நிறங்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை சகோதரிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் வழங்கப்ப ட்டது. அதனை தொடர்ந்து பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா சார்பு நீதிபதிகள், நீதித்துறை, நடுவர்கள், வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    • உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

    உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

    ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.

    அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினா
    • திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பார்

    பழமைவாதியான டொனால்டு டிரம்ப் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த அவர், ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கு தடை விதித்தார்.

    அவர்களுக்கு எனத் தனியாகக் கவனம் மற்றும் ஏற்படும் செலவு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர் இதை செய்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினார். இப்போது பிரச்சனை என்னவென்றால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

     

    அவர்களைக் குறிவைத்து டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆட்சிக் காலத்தை போலவே ராணுவத்தில் திருநங்கைகள் சேர டிரம்ப் தடை விதிக்க உள்ளதாக அவரது அதிகார வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    உத்தரவைத் தயாரித்து வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கவே ராணுவத்தில் உள்ள 15,000 திருநங்கைகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

     

    இதுதவிர்த்து பாலினத்தை உறுதிப்படுத்தும் இதுதவிர்த்து சுகாதாரப் பாதுகாப்பை திருநங்கைகள் அணுகுவதைத் தடை செய்தல், பள்ளியில் திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பது உள்ளிட்ட பிற்போக்கான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    அதிபர் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்புகள்:

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

    அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனி திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.

    ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டுவரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு.

    சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ தயாரிப்புகள் மீது 25% வரி விதிக்கப்படும். சீன பொருட்களுக்கான வரி குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

    மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ப்படும். அமெரிக்க மக்களின் நலன் கருதி நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    அரசு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் பேச்சு சுதந்திரம் கொண்டு வரப்படும். அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்கி கொள்ளலாம்.

    எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய நவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எரிசக்தி செலவை குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும்.

    உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை வழங்க முடியும். இது அமெரிக்காவிற்கும் பலன் தரும்.

    ×