search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்டி-சேலை"

    • மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட் சிக்குட்பட்ட பகுதி முதியோர் உதவித்தொகை வாங்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு தீபாவளிக்கு வேட்டி-சேலை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல் மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேர்கிளம்பி பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இருந்தது. அதை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி வார்டு உறுப்பினர் லலிதா கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக் கையை ஏற்று ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியில் சுற்று சுவர் சீரமைத்தல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தொடங்கி வைத்தார்.

    • கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • சார்பு அணியினர், மகளிர் அணியினர், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வண்ணாரபேட்டை, மேல்கோடமப்பந்து, வண்டிசோலை ஆகிய வார்டு பகுதிகளின் கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பா ட்டில் பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். ெதாடர்ந்து ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ச்சு ணன், கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெ யசீலன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி நகர செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பி னருமான அக்கீம்பாபு மற்றும் ஒன்றியசெ யலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூ ராட்சி செயலாளர்கள் சார்பு அணியினர், மகளிர் அணியினர், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×