என் மலர்
நீங்கள் தேடியது "காதல் திருமணம் செய்த பெண்"
- மணிகண்டன்,விக்னேஷ்வரி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- விக்னேஷ்வரி மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்த காலங்கரையில் உள்ள கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விக்னேஷ்வரி(வயது 26).
இவர்கள் 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று பண்பொழியில் உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக மணிகண்டன் தனது மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடனே அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று விட்டார்.
- சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கரியானூர், காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த சந்திரமதி என்பவரின் மகள் கிருத்திகா (20). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஈரோடு மாணிக்கம்பாளை யம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையுள்ளது.
கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு கார ணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவ த்தன்று கணவன், மனைவி க்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திரும ணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்ப ட்டுள்ளது.