என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூசாரி பலி"

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி

    வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). கோவில் பூசாரியாக வேலைப் பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை பால் வாங்குவதற்காக சென்றார். வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த பைக் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி வந்த வாசி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42). திருமணமாக தவரான இவர் கோவில் பூசாரி இருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சங்ககிரியை அடுத்து வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது. இதில், குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் உடலை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ் டிரைவரான சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த சுதாகர் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ×