search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி பூசாரி பலி
    X

    பைக் மோதி பூசாரி பலி

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி

    வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). கோவில் பூசாரியாக வேலைப் பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை பால் வாங்குவதற்காக சென்றார். வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த பைக் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி வந்த வாசி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×