என் மலர்
நீங்கள் தேடியது "வாடகை பாக்கி"
- டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
- ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
போபாலில் உள்ள ஒரு குத்தகை வீட்டில் இயங்கி வந்த ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம், மூன்று மாதங்களாக வாடகை செலுத்தப்படாத காரணத்தால், வீட்டு உரிமையாளரால் பூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி இணை செயலாளர் ராமகாந்த் கூறும் போது, "நாங்கள் நேர்மையாக வேலை செய்யும் போது இவை அனைத்தும் நடக்கும். நிலைமைகள் மாறும். நாங்கள் நேர்மையானவர்கள். தற்போது, எங்கள் கட்சியிடம் நிதி இல்லை. எனவே எங்களால் அதை செய்ய முடியவில்லை," என்று தெரிவித்தார்.
"அலுவலக வாடகை தொகை எவ்வளவு என்றும், அது எவ்வளவு காலமாக செலுத்தப்படாமல் உள்ளது என்பது பற்றியும் எனக்கு தெரியாது" என்று முன்னாள் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா, "ஆம் ஆத்மியின் மத்திய பிரதேச அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது, அடுத்து காங்கிரஸ் தான்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சமீபத்தில் ஆம் ஆத்மியை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியமைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை மிஞ்சியது. மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க. மட்டும் 48 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.
- ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
- 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 2022-2023-ம் ஆண்டு க்கான சொத்து வரி, காலி இட வரி, குடிநீர் வரி, வணிக கடைகளுக்கான வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும், மாநகராட்சி வணிக கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருந்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்த மான நேதாஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகள் வாடகை யாக ரூ.97 ஆயிரத்து 965 ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் அந்த மூன்று கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் செலுத்தாததால் 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.