search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னேரி"

    • மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
    • 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசுஉயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளியில் மொத்தம் 16 ஆசிரியர்கள் இருந்த நிலையில் பணி மாறுதல், பணி ஓய்வு காரணமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது தொடக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரும் உயர்நிலைப் பள்ளிக்கு 3 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.

    வேறு வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்தும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரியும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைசேரி-பொன்னேரி சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவ்வழியே வந்த 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். அவர்களிடம் திருப்பாலைவனம் போலீ

    சார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

    பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.

    இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

    • வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது.
    • 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன.

    பொன்னேரி:

    பழவேற்காட்டில் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கடற்கரையில் வைத்து செல்வது வழக்கம்.

    அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது மீன்பிடி வலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மீனவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் வலைகளுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்து நாசமான வலைகளின் சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன. பழவேற்காடு திருமலை நகர், கோட்டை குப்பம் பகுதியில் கடந்த மாதத்தில் மீன்பிடி வலைகள் எரிந்ததாகவும் இது குறித்து மீன்வளத்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பழவேற்காடு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மீன்பிடி வலைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
    • அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.

    இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.

    இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

    மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி 14 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் வாகே.சங்கேத் பல்வத் சான்றிதழ் வழங்கினர். மீதம் உள்ள மனுக்களுக்கு பரிசிலனை செய்து வழங்கபடும் என தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த 65 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாகேட்டு கடந்த 3 வருடமாக ஜமாபந்தியில் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறியும் இது வரை நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதேபோல் பொன்னேரி அடுத்த காட்டவூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விடுபட்ட 16 பேருக்கு பட்டா வழங்க கோரியும் 66 பேருக்கு அசைமெண்ட் பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றியமைக்க கோரியும் பலமுறை ஜமாபந்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    • சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சாலையில் சுற்றும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஹாயாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சாலையின் ஓரத்தில் படுத்துக் கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறக்கும் சம்பவமும், இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே பொன்னேரி, மீஞ்சூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பொன்னேரி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. நேர்முக உதவியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வண்ண மீன் வளர்ப்பு, மீஞ்சூர், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், வெள்ளக்குளம் பள்ளிபாளையம் பகுதி சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறு ஏரி குளங்களில் விடுவதால் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மெரட்டுர் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.
    • உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து அச்சிரம்பள்ளம் கிராமத்திற்கு உயர்அழுத்த மின்கம்பம் செல்கிறது.

    இந்தநிலையில் அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.தாவிப்பிடித்தால் எட்டும் உயரத்தில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லவே அச்சம் அடைந்து வருகிறோம்.

    சிறுவர்கள் குளத்தில் குளிக்க செல்லும் போது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த தாழ்வான மின் கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பொன்னேரி சுற்றுவட்டார சபை விசுவாசிகள் குழுவாக பாடல் பாடி இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்து ஊர்வலமாக சென்றனர்
    • கிறிஸ்தவ போதகர்கள் இணைந்து நடத்திய சிலுவை தியான ஊர்வலம் தடப்பெரும்பாக்கத்தில் ஆல் மைட்டி காட் சபையில் இருந்து பாஸ்டர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    புனித வெள்ளியை முன்னிட்டு பொன்னேரியில் அனைத்து கிறிஸ்தவ போதகர்கள் இணைந்து நடத்திய சிலுவை தியான ஊர்வலம் தடப்பெரும்பாக்கத்தில் ஆல் மைட்டி காட் சபையில் இருந்து பாஸ்டர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விசுவநாதன், தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலமானது பொன்னேரி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல் இ எஃப் சர்ச்சில் முடிவடைந்தது.

    இதில் பொன்னேரி சுற்றுவட்டார சபை விசுவாசிகள் குழுவாக பாடல் பாடி இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்து ஊர்வலமாக சென்றனர். இதில் ஒருவர் இயேசுவைப்போல் வேடமணிந்து சிலுவை மரத்தில் தொங்கிய படி சென்ற காட்சி பரவசத்துடன் காணப்பட்டது. ஊர்வலத்தில் பிஷப்மார்கள், போதகர்கள், ஊழியர்கள், விசுவாசிகள், சுவிசேஷகர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
    • பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்அடுக்குகளில் கிழக்குதிசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்ந சில நாட்களாக விட்டு விட்டு கோடை மழை கொட்டி வருகிறது. பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் பச்சை பயிர் சாகுபடி செய்திருந்த சுமார் 300 ஏக்கர் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து அறிந்ததும், மீஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார், வேளாண்மை துணை அலுவலர் விநாயகம் மற்றும் அதிகாரிகள் சின்னக்காவனம், மெதூர், விடதண்டலம், பெரும்பேடு, ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கி உள்ள தண்ணீரை நேரில் சென்றுஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    ×