என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு இடைத்தேர்தல்"

    • வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விளக்கம்.
    • தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளது.

    வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வயநாடில் இடைத்ததேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளது.

    அப்பேது அவர், "கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது.

    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை" என்றார்.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா, உத்தரபிரதேசத்தின் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியதாவது:-

    பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் கோர்ட்டு 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. எனவே அங்கு தேர்தல் நடத்த அவசரம் இல்லை. நாங்கள் காத்திருப்போம்.

    விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்துவிடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை. எனவே வயநாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    எஞ்சிய பதவிக்காலம் ஓராண்டுக்குள் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை. வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

    ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும், 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

    அதன்படி, வயநாட்டில் இயற்கை பேரிடம் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
    • இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி அங்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

    இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சத்யன் மோகேரி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார்.

    பா.ஜ.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    • வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

    அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

    தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். ஓரிரு நாளில் பாரதிய ஜனதா வேட்பாளர் யார்? என்பது தெரிந்துவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் வருகிற 22-ந்தேதி கேரளா வருகிறார். மறுநாள் (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார். தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப்பெற வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந்தேதி நடைபெறுகிறது.

    • வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
    • இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி அங்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சத்யன் மோகேரி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பா.ஜ.க. இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளது.

    • வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.
    • பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

    அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும், பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் இன்று கேரளா வருகிறார். நாளை (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
    • பொதுமக்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

    வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் தற்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் மைசூருவில் இருந்து கார் மூலமாக வந்தார்.

    அவருடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தலைவரான சோனியா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் வந்தார்கள். அவர்கள் சுப்தான் பத்தேரி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இரவில் தங்கினர். வயநாடு வரும் வழியில் பிரியங்கா காந்தி அவரை வரவேற்க திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    பிரியங்கா இன்று வயநாடு தொகுதியில் உள்ள கல்பெட்டா பகுதியில் தனது சகோதரர் ராகுல்காந்தி எம்.பி.யுடன் ரோடு-ஷோ நடத்தினார். அவருடன் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் பங்கேற்றனர்.

    அவர்கள் கல்பெட்டா பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் ரோடு-ஷோ நடத்தினார்கள். அவர்கள் சென்ற சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர்.

    ரோடு-ஷோ நிறைவடைந்த இடத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    பிரியங்கா காந்தி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்துக்காக அடுத்த வாரம் வயநாட்டிற்கு மீண்டும் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன்.
    • உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று ரோடு-ஷோ மூலமாக தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார். ரோடு-ஷோவிற்கு பிறகு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

    நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாரம் செய்துள்ளேன். 1989-ம் ஆண்டு 17 வயதில் என்னுடைய தந்தைக்காக பிரசாரம் செய்தேன். எனது தாய், சகோதரர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்காக பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன்.

    இப்போது எனக்காக பிரசாரம் செய்கிறேன். எனக்காக பிரசாரம் செய்வதே இதுவே முதன்முறையாகும். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும், எனது குடும்பமும் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது இதுகுறித்து தமிழசை கூறுகையில், " உண்மையில் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார்.

    பிரியங்கா காந்தி போட்டியிடுவதன் மூலம், இது வாரிசு அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக ஒரு இளம் பெண் வேட்பாளரைத் தொகுதியில் நிறுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் பங்களிப்பு என்ன? எனவே இனி மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.

    மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது குறித்து அவர் கூறுகையில், "சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

    அந்த மாநாட்டின் பெயர் 'சனாதன தர்மத்தை ஒழித்தல். அப்படியென்றால், அவருடைய வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்று எப்படிச் சொல்ல முடியும்? டெங்குவை ஒழிப்பது போல் சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

    அவர், சனாதன தர்மத்தை பாகுபாடு என்றும், எஸ்டி/எஸ்சி மற்றும் சமூக நீதிக்கு எதிராகவும் தவறாக விளக்குகிறார்.

    சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை. அவர்கள் மக்களிடையே வேறுபாடு காட்ட விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

    • வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
    • வயநாடு எனக்காக செய்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

    வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட சகோதரி பிரியங்கா காந்தி வேத்ரா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

    முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு மக்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் உறவை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    வயநாடு எனக்காக செய்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்வுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது, அவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி செயல் மட்டுமே.

    நாட்டில் இரண்டு எம்.பி.க்களை கொண்ட ஒரே தொகுதி வயநாடு என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒன்று அதிகாரப்பூர்வமானது, மற்றொன்று அதிகாரப்பூர்வமற்றது. மேலும் வயநாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

    நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, நான் என் சகோதரியை அவளுடைய நண்பர்களுடன் பார்த்தேன். நான் அவளிடம் சொன்னேன், பிரியங்கா, உங்கள் நண்பர்களைக் கவனிக்க நீங்கள் இவ்வளவு தூரம் செல்ல முடியாது. ஆனால், அவள் எதையும் செய்ய தயாராக இருந்தாள்.

    சில சமயம் நண்பர்கள் பாராட்டமாட்டார்கள். நான் அவளிடம் சொல்வேன், நீ ஏன் இதைச் செய்கிறாய்? நான் விரும்புவதால் அதை செய்கிறேன், அவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை என்று அவள் சொல்வாள்.

    ஒரு நபர் தனது நண்பர்களுக்காக அதைச் செய்யத் தயாராக இருக்கிறார். அவர் குடும்பத்திற்காக என்ன செய்யத் தயாராக இருக்கிறார் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். என் அப்பா இறந்தபோது, என் அம்மாவை என் சகோதரி கவனித்துக் கொண்டார். அவளுக்கு அப்போது 17 வயது.

    தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தைப் பற்றி நான் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். காரணம், பிரியங்கா வயநாட்டு மக்களை தனது குடும்பமாக கருதுகிறார்.

    வயநாட்டு மக்களிடமிருந்து தனக்கு ஒரு உதவி தேவை. அவள் தயாரித்த ராக்கியை என் கையில் வைத்திருக்கிறேன். அது உடையும் வரை நான் அதைக் கழற்றமாட்டேன். இது ஒரு சகோதரன் தன் சகோதரிக்கான பாதுகாப்பின் சின்னம். எனக்கு பிறகு, என் சகோதரியை பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    வயநாடு மக்களைக் கவனிப்பதில் அவர் தனது முழு ஆற்றலையும் செலுத்துவார். மேலும் நான் அதிகாரப்பூர்வமற்ற எம்.பி என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, நான் இங்கு வந்து தலையிட அனுமதி பெற்றுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரியங்கா வயநாடு எம்.பி.யாக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றுவார்.
    • ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரோடு-ஷோ.

    திருவனந்தபுரம்:

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ராகுல்காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மேலும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி பிரியங்காவுக்கு ஆதரவு திரட்டினார். நேற்றைய நிகழ்வுகளின் போது சகோதரி பிரியங்காவுடன் ராகுல்காந்தி பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அந்த பஸ்சில் பயணித்த ஒருவர் கேட்ட கேள்விக்கு விளையாட்டுதனமாக பதிலளித்தார்.

    அந்த பயணி ராகுல்காந்தியிடம், "வயநாடு தொகுதியில் உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா காந்தி இருப்பாரா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, "இது கடினமான கேள்வி" என்று பதிலளித்த ராகுல்காந்தி, சிரித்துக்கொண்டே "நான் அப்படி நினைக்கவில்லை" என்று விளையாட்டாக தெரிவித்தார்.

    இந்த வீடியோ ராகுல்காந்தியின் "எக்ஸ்" வலைதளம் வழியாக வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ராகுல்காந்தி மேலும் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

    வயநாடு தொகுதியின் எம்.பி.யாக என்னைத்தவிர வேறு யாரை நான் தேர்ந்தெடுப்பேன். அது எனது சகோதரியாகத்தான் இருக்கும். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். பிரியங்காவுக்கு பல குணங்கள் இருக்கின்றன. வயநாடு எம்.பி.யாக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றுவார். பிரியங்காவுக்கும் வயநாடு ரொம்ப பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×