என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தண்டாயுதபாணி கோவில்"
- தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6-ந் தேதி வரை நடக்கிறது.
- 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.
மதுரை
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுத பாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலை யில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம் நிகழ்ச்சியும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.
விழாவில் நாளை (2-ந் தேதி) மூலவருக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். வருகிற 5-ந் தேதி உத்திர தினத்தன்று காலை 4 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், ருத்ர ஜெப விசேஷ அபி ஷேக ஆராதனை, தங்க கவச சாத்துப்படி நடக்கிறது. அன்று இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 6-ந் தேதி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.
விழா நடக்கும் 7 நாட்களி லும் தினசரி காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்