search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த மாநகராட்சி"

    • 13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
    • நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

    திருச்சி:

    தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

    பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

    அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பிடித்தது.

    நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பேரூராட்சியை பொறுத்தமட்டில் விக்கிரவாண்டி முதலிடத்தையும், ஆலங்குடி 2-வது இடத்தையும், வீரக்கால்புதூர் 3-வது இடத்தையும் பெற்றது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் 9-வது மண்டலம் முதலிடத்தையும், 5-வது மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்தது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களிடம் வழங்க உள்ளார்.

    • மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திண்டுக்கல்லை தரம் உயர்த்த பாடுபடுவேன்.
    • திண்டுக்கல் மாநகராட்சியில் பொறுப்பேற்ற முதல்பெண் கமிசனர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி கமிசனராக இருந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் பணி ஓய்வு பெற்று சென்றதையடுத்து புதிய கமிசனராக மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதவிஏற்று கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சிபெற்று பெண்கள் பிரிவில் மாநிலத்திலேயே முதல்இடம் பிடித்தேன். அதன்பிறகு 2014-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த போது சிறந்த நகராட்சிக்கான விருதை பெற்றேன்.

    2019-ம் ஆண்டு தர்மபுரி நகராட்சியில் ஆணையாள ராக பணிபுரிந்தபோதும் சிறந்த நகராட்சிக்கான விருதுபெற்றேன். 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பணிபுரிந்தபோது சிறந்த திடக்கழிவு மேலா ண்மைக்கான விருது பெற்றேன். பின்னர் சென்னையில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு மன்ற நடுவர் நீதிமன்ற செய லாளராக பணிபுரிந்தேன். தற்போது திண்டுக்கல் மாநகராட்சியின் கமிசனராக பொறு ப்பேற்றுள்ளேன்.

    மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திண்டுக்கல்லை தரம் உயர்த்த பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சியில் மகேஸ்வரி 5-வது கமிசனராவார். மேலும் மாநகராட்சியில் பொறுப்பேற்ற முதல்பெண் கமிசனர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.

    ×