என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10ம் வகுப்பு பொதுத்தேர்வு"

    • கேள்வியில் கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.
    • ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவறுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட 4வது கேள்வியில் உள்ள கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.

    ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறிய நிலையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சமூக அறிவியல் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
    • மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    அதன்படி இன்று (6-ந் தேதி) தமிழ், 10-ந் தேதி ஆங்கிலம், 13-ந் தேதி கணிதம், 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது .

    மொத்தம் 188 தேர்வு மையங்களில் நடைபெறும் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 24, 506 ஆண்களும் 23 ஆயிரத்து 819 பெண்களும் மற்றும் 48,325 பேர் எழுதுகின்றனர்.

    தனித் தேர்வாளர்கள் 23 ஆயிரத்து 78 பேர், நரம்பியல் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 270 பேர், மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

    இந்த பொதுத் தேர்வில் 2059 அறை கண்காணிப்பாளர் மற்றும் 239 பறக்கும் படையினர் பணி ஈடுபட்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்ற டிஜிட்டல் வாட்ச், பெல்ட், ஷூ அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவர்கள் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு உள்ளே அனுமதித்தனர்.

    ×