என் மலர்
நீங்கள் தேடியது "பொன்னேரி நகராட்சி"
- பொன்னேரி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
- வரிபாக்கியை வசூலிக்க தெருக்ககளில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் 2022-23 ஆண்டிற்கான சொத்து வரியும், தொழில் வரி, குடிநீர் வரி, கடைவரி, வீட்டு வரி உள்ளிட்டவை இன்னும் செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் வரி வசூலிக்க நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உத்தரவின் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.54 லட்சம் வரை வரிபாக்கி இருப்பதாக தெரிகிறது. வரிபாக்கியை வசூலிக்க தெருக்ககளில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும் ஒலிப்பெருக்கி, துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்றும் வரிசெலுத்த அறிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, 'வரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. குடிநீர் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், என்று எச்சரித்து உள்ளார்.
- பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
- கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், ஒட்டல்கள், 10 திருமண மண்டபங்கள்,3 திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 5 டன்னிற்கு மேல் குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் தரம்பிரித்து சேகரித்து வருகிறது.
இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட, கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டப உரிமையாளர்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் தினந்தோறும் 100 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை வழங்குபவர்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகம் கொண்டவர்கள் என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை கழிவுகளை வழங்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நகராட்சி நிர்வாகத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
- நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
- பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 22 வார்டுகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.54 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 22 வார்டுகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நகராட்சி ஆணையர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணியை முடிக்காத பொன்னேரி நகராட்சியை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரியும் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் அண்ணா சிலை அருகே பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் துலுக்காணம்,மோகன், அரவிந்த்,சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் மாசிலா மணி, முன்னாள் மாநில துணைத் தலைவர் துரை ஜெயவேல், இளைஞர்அணி செயலாளர் சுதாகர், மகளிரணி கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
- புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 19-வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று பொன்னேரி-தச்சூர் சாலையில் கவுரி தியேட்டர் மற்றும் பழைய டி.எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் வயதானவர்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் வசதிக்காக அருகே கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் கடந்த 2015-16 ம் ஆண்டு ரூ. 7.41 லட்சம் மதிப்பில் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டது. இந்த கடை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ரேசன் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வருவதில் சிரமம் இருப்பதாக கூறி ரேசன் கடை மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் 19-வது வார்டு பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வரும் நிலை நீடித்து வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளாக பயன்படாமல் மூடிகிடக்கும் ரேசன் கடையை திறந்தால் அப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமையில் ரேசன் கடையை திறக்க கோரி துணை வட்டாட்சியர் கனக வள்ளியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். ஆனால் இதுவரை ரேசன் கடையை திறக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, கும்மங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை எந்த பயனும் இல்லாமல் மூடி கிடக்கிறது.
இதனால் நாங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகிறோம். இதனால் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் ரேசன் பொருட்களை கொண்டு வர அடுத்தவர்களை நம்பி இருக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த 9 ஆண்டுகளாக மூடி கிடக்கும் ரேசன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.