என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஐ"

    • உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.
    • மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை.

    கோடிங் செய்வது, வலைதளங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு சேவை உருவாக்கப்பட்டு இருக்கிறது. காக்னிஷன் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய சேவைக்கு டெவின் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுவே உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.

    இந்த சேவையிடம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை சிறப்பாக செய்து முடித்துவிடும். புதிய சேவை மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்று இதனை உருவாக்கி இருக்கும் காக்னிஷன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    மனித பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தான் டெவின் உருவாக்கப்பட்டு இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மனித பொறியாளர்களுக்கு மாற்றாக இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டெவினின் குறிப்பிடத்தக்க திறன்களில் ஒன்றாக இது கடினமான பணிகளையும் சிந்தித்து, திட்டமிட்டு செய்து முடிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிவுகளை எடுப்பது, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாளடைவில் சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொள்வது என டெவின் கிட்டத்தட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    மென்பொருள் பொறியியல் துறையில் SWE-bench கோடிங் பென்ச்மாரக்கில் மென்பொருள்களை மதிப்பிடுவதில் டெவின் அதிநவீன தீர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனைகளில் டெவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிஜ உலகின் சவால்களில் டெவின் முந்தைய ஏ.ஐ. மாடல்களை விட அதிகளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில், இது மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது.
    • டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2024 நிகழ்ச்சி நாளை ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 18, ஐ- பாட் OS 18, மாக் OS 15, வாட்ச் OS 11, டிவி OS 18 மற்றும் விஷன் OS 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த வருட நிகழ்வில் ஆப்பிள் செயலிகளிலிலும், சேவைகளிலும் ஆக்கபூர்வமான வகையில் ஏ.ஐ தொழிநுட்பத்தை பயணவபடுத்துவது குறித்தும், பயனர்களின் தனியுரிமையையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் ஆப்பிள் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிகழ்வில் ஐ-போன், ஐ- பட மற்றும் மாக் ஆகிய சாதனங்களில் புதியதாக ஒருங்கிணைந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓபன் ஏஐ, சாட் ஜிபிடி செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யும்.

     

    ஆப்பிளின் புதிய தொழில்நுட்பமான ஏ.ஐ யில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பயனர்களின் தினசரி பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளில் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்படும். ஆப்ட் இன் மற்றும் பீட்டா மென்பொருள் கொண்ட சாதனங்களிலும் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை அடையலாம்.

    ஆப்பிள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ ஐ கருவிகள் ஆகியவற்றை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ராசஸிங்கில் செய்ய பயன்படுத்தலாம். மேம்படுதிகப்பட்ட இந்த ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், இணையதள பக்கங்கள் ஆகியவற்றின் சுருக்கங்களை இந்த புதிய ஏஐ பயனர்களின் பார்வைக்கு வழங்கும். இதன்மூலம் எளிதில் அனைத்தையும் குறித்த சுருக்கங்களை விரைவில் அறிய முடியும்.

    மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பயனர்களுக்கு அறிவுறுத்தும் வசதியில் ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது.

    ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அசிஸ்டண்டாக செயல்ப்படும் 'சிரி' ஏஐ மூலம் மேம்படுத்தபடும். முக்கியமாக ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் அடுத்த வருடத்துக்குள் சிரி தயாராகிவிடும் என்ற கூடுதல் தகவலையும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

     

    ஜிமெயிலில் இருப்பதைப் போல இமெயிலிலும் மெயில்களை தானாக வகைப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. மெசேஜ்கள் மற்றும் சாட் - களில் டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெமோ அனுப்புவது, புகைப்பட செயலிகளில் எடிட்டிங்கை எளிமையாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஏஐ யில் அடங்கும்.

    அதுமட்டுமின்றி பல்வேறு மென்பொருள் அப்டேட்களும் நாளைய நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளது. அதன்படி iOS 18 ஹோம் ஸ்க்ரீன், கன்ட்ரோல் சென்டர், செட்டிங்ஸ் செயலி, மெசேஜிங் செயலி, பாஸ்வேர்டு நிர்வகிக்கும் செயலி, காலகுக்கேட்டார், காலெண்டர் ஆகிய செயலிகளும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட், ஆப்பிள் வாட்ச், மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றில் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    • அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.
    • கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் பில் கேட்ஸ் நடந்து வருகிறார்.

    இதுவரை வந்த ஏஐ வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ இதுதான் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக  சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.

    கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், ஸேனா அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றனர். 

    இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். ஏஐ தொழிநுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. 

    • ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
    • ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்கும் நிறுவனங்களாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளன. எனினும், ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வதில் இரு நிறுவனங்களும் பின்னடைவில் இருப்பதாக இன்ஃபர்மேஷன் சர்வீஸ் குரூப் (ஐஎஸ்ஜி) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    2024 ஜூன் மாதத்திற்கு முந்தைய 12 மாத காலங்களில் ஏஐ சார்ந்த சுமார் 2250 திட்டங்களில் அக்சென்ச்சர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே காலக்கட்டத்தில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 300 மற்றும் 200 ஏஐ சார்ந்த திட்டங்களை கைப்பற்றி இருக்கின்றன.

    செயற்கை நுண்ணறிவு என்ப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பாக தகவல்கள் தான் ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

     


    அதன்படி அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1000 ஏஐ திட்டங்களை முடித்துள்ளது. ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வது தொடர்பாக முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்கள் பட்டியலில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப் மற்றும் கேப்ஜெமினி எஸ்இ உள்ளிட்டவை முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

    புதிய தொழில்நுட்பங்களை முன்கூட்டியே பயன்படுத்த துவங்கியது மற்றும் போட்டியில் அதிகவனம் செலுத்துவது உள்ளிட்டவை தான் அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் அதிகளவு ஏஐ திட்டங்களை கைப்பற்றுவதற்கு காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

    "ஏஐ சார்ந்த திட்டங்களில் முன்கூட்டியே ஆர்வம் காட்டுவதன் மூலம் அதிக திட்டங்களை கைப்பற்றவோ அல்லது அதிக திட்டங்களில் பணியாற்றவோ முடியும். சர்வதேச நிறுவனங்கள் முன்கூட்டியே இதுதொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதன் விளைவு தான், அவர்கள் இத்தனை திட்டங்களை பெறுவதற்கு முக்கிய காரணம்," என்று கான்ஸ்டெலேஷன் ரிசர்ச் நிறுவனர் ரே வாங் தெரிவித்தார்.

    • தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது.
    • அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அதிக பொய் சொல்லும்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏஐ தொழில்நுட்பம் பற்றி தொடர்ச்சியாக கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், அவர் ஏஐ ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் பற்றி மனம்திறந்துள்ளார்.

    சமீபத்திய பேட்டியில், "ஏஐ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது."

    "தற்போது சின்ன விஷயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகீரக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது," என்றார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
    • 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு டிரம்பும் அவரும் நடனம் ஆடும் வீடியோவை மஸ்க் பகிர்ந்துள்ளார்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் டிரம்பை நேர்காணல் செய்தார். உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.

    இந்நிலையில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் டொனால்டு டிரம்பும் நடனமாடுவது போன்ற AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "எங்களை வெறுப்பவர்கள் இதனை AI என்று சொல்லக்கூடும்" என்று அவர் கிண்டலடித்துள்ளார்.

    இந்த AI வீடியோவில் 'பீ கீஸ்' என்ற கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு மஸ்க்கும் டிரம்பும் நடனம் ஆடுகின்றனர்.

    அண்மையில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேம் ஆஃப் த்ரோன்ஸ் டேனிரோ டார்கேரியன் சாட் ஜிபிடியுடன் காதல் வயப்பட்டுள்ளான்
    • சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது.

    ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப்  த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் [Daenero] கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.

     

    சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளான்.

    நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன, தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து சைன்ஸ் பிக்க்ஷன் சினிமக்களில் கதையாக கூறப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலேயே நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
    • அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பக (NJMA) திறப்பு விழாவின் போது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்த கேள்வியைக் கேட்டு ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார். "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு குற்றம் மிக கொடூரமாக இருக்கும் போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது.

    இந்த பதில் சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களை கவர்ந்தது. அருங்காட்சியக திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த அருங்காட்சியகத்தின் கருத்தாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் எடுத்ததாக கூறினார். இந்த அருங்காட்சியகம் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது."

    "இங்குள்ள எனது சகாக்கள் அனைவரின் சார்பாகவும், இந்த அருங்காட்சியகத்தை இளைய தலைமுறையினருக்கு இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.

    தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 65 வயதை எட்டியவுடன் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கு மறுநாளான நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.



    • மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது.
    • கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்

    நம் வாழ்வில் இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது இருந்துதான் தீரும். ஆதலால் நாம் கண்டிப்பாக ஒருநாள் மரணமடைவோம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம் மரணம் எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாது.

    ஆனால் தற்போது உலகில் வளர்ந்து தொழில்நுட்பம் நாம் எப்போது இறப்போம் என்பதையும் துல்லியமாக கணிக்க ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

    மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. அவ்வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரண கடிகாரம் (Death Clock) என்ற ஆப் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆப் ஒரு நபர் எப்போது மரணமடைவார் என்று துல்லியமாக கணித்து கூறுகிறது.

    கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதே இந்த ஆப்பின் வெற்றியை சொல்கிறது.

    இந்த ஆப் சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200 க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆப், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியைக் கணிக்கின்றது.

    தற்போது அமெரிக்காவில் வாழும் 85 வயது முதியவர் ஒருவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10% எனும் சராசரியாக இன்னும் 5.6 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்றும் மரண கடிகாரம் (Death Clock) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
    • ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகர் பதவிக்கு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.

    தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இவர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.

    "ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏஐ-இல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார்" என்று டிரம்ப் கூறினார்.

    முன்னதாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஆலோசகர்கள் குழுவில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

    புதிய பொறுப்பு குறித்து பேசிய ஸ்ரீராம் கிருஷ்ணன், "ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பது பெருமையான உணர்வை கொடுக்கிறது," என்று தெரிவித்தார்.

    • அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று பொருளாகும்.
    • ஹபீபி படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.

    தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ஹபீபி'. அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று பொருளாகும்.

    இப்படத்தை அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இயக்குநர் கஸ்தூரிராஜா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஈஷா என்பவர் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக 'ஜோ' படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் 'ஹபீபி' திரைப்படத்தில், AI தொழில்நுட்பத்தில் நாகூர் ஹனிபா குரலில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA ஆவர்.
    • இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது.

    2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது.

     

    வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

    பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

    தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள். 

    ×